| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3189 | திருவாய்மொழி || (5-7-நோற்ற நோன்பிலேன்) (வானமாமலைப் பெருமானது அருளை வேண்டல் (சிரீவரமங்கலம்)) (கீழ்ப்பாட்டில் “அடியேன் தொழவந்தருளே” என்றாரே; அர்ச்சாவதார ஸாமதியைக் குலைத்துக் கொண்டு ஸ்ரீரீவரமங்கலநகரிலிருந்து திருக்குருகூரிலே திருப்புளியடியிலே வந்து காட்சி தர வேணுமென்றாயிற்று. ஆழ்வாருடைய கோரிக்கை; அங்ஙனே வரக்காணாமையாலே ‘உபேக்ஷித்தான் போலும்’ என்றஞ்சி “பிரானே! என்னை உபேக்ஷியாதொழியவேணும்” என்கிறார்.) 7 | வந்தருளி என் னெஞ்சிடம் கொண்ட வானவர் கொழுந்தே! உலகுக்கோர் முந்தைத் தாய் தந்தையே! முழு ஏழுலகும் உண்டாய்! செந் தொழிலவர் வேத வேள்வி அறாச் சிரீவர மங்கல நகர் அந்தமில் புகழாய்! அடியேனை அகற்றேலே.–5-7-7 | வந்தருளி,Vandharuli - (பரமபதம் முதலியவற்றை விட்டு) எழுந்தருளி என்நெஞ்சு,En nenju - எனது நெஞ்சை இடம் கொண்ட,Idam konda - இருப்பிடமாகக் கொண்ட வானவர் கொழுந்தேத,Vaanavar kolundheyadha - நித்யஸூரிநாதனே! உலகுக்கு,Ulagukku - இவ்வுலகத்துக்கு ஓர் முந்தை தாய் தந்தையே,Or mundhai thaai thandaiyae - அநாதிஸித்த மாதாபிதா வானவனே! முழு ஏழ் உலகும் உண்டாய்,Muzu ezhu ulagam undaay - ஸகல லோகங்களையும் திருவயிற்றிலே வைத்து நோக்கினவனே! செம் தொழிலவர்,Sem thozhilavar - சிறந்த அனுட்டானங்களையுடையவர்களான ஸ்ரீவைஷ்ணவர்களினுடைய வேதம் வேள்வி அறா,Vedham velvi araa - வைதிகஸமாராதனம் இடையறாமல் நடக்கப் பெற்ற கிரீவரமங்கலம் நகர்,Sreevaramangalam nagar - வானமாமலைப்பதியிலே அந்தம் இல் புகழாய்,Antham il pugazhaay - முடிவில்லாத புகழையுடையவனாய் எழுந்தருளியிருப்பவனே! அடியேனை அகற்றேல்,Adiyenai akatrel - என்னைப் புறம்புபடுத்தா தொழியவேணும். |