Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3190 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3190திருவாய்மொழி || (5-7-நோற்ற நோன்பிலேன்) (வானமாமலைப் பெருமானது அருளை வேண்டல் (சிரீவரமங்கலம்)) (கீழ்ப்பாட்டில் * அடியேனைகற்றேலே என்று ஆழ்வார் பிரார்த்திக்கக்கேட்ட எம்பெருமான் ‘ஆழ்வீர்!’ உம்மை அகற்றுவதற்கு என்ன ப்ரளக்தியுண்டாயிற்று? ‘அப்ரஸந்தமாக ஏதுக்கு இரக்கிறீர்?’ என்றருளிச்செய்ய, பிரானே! அடிமைக்கு விரோதியான ஸம்ஸாரத்திலே என்னை வைத்திருப்பது அகற்றினபடியன்றோ; அப்ரஸக்தமாயோ என் பேச்சிருப்பது? என்கிறார்.) 8
அகற்ற நீ வைத்த மாய வல் லைம் புலன்களா மவை நன்கறிந்தனன்
அகற்றி என்னையும் நீ அரும் சேற்றில் வீழ்த்தி கண்டாய்
பகர்க் கதிர் மணி மாட நீடு சிரீவர மங்கை வாணனே! என்றும்
புகற்கரிய எந்தாய்! புள்ளின் வாய் பிளந்தானே!–5-7-8
பகர் கதிர்,Pagar kathir - விளங்காநின்ற ஒளியையுடைத்தான்
மணிமாடம் நீடு,Manimaadam needu - மணிமாடங்கள் ஓங்கியிருக்கப்பெற்ற
திரீவரமங்கை,Thireevaramangai - வானமாமலையிவ்பதியிலே
வாழ்நனே,Vaazhnane - வாழுமவனே!
என்றும்,Endrum - ஒருநாளும்
புகற்கு அரிய வந்தாய்,Pugarkku ariya vandhaay - (உதவாதவர்களுக்கு) ப்ராபிக்கவொண்ணாத ஸ்வாமியே!
புள்ளின் வாய் பிளந்தானே,Pullin vaai pilandhaane - பநாசுரனது வாயை இரு துண்டாக்கி அவனை முடித்தவனே
அதகற்ற நீ வைத்த,Athakatra nee vaitha - ஒதுக்குகைக்காக நீ உண்டாக்கி வைத்த
மாயம்,Maayam - ஆச்சரியமான செய்கைகளையுடைய
வல்,Val - பலிஷ்டங்களான
ஐம்புலன்கள் ஆம்அவை,Aimpulangal aamaavai - பஞ்சேந்திரியங்களை
நன்கு அறிந்தனன்,Nandru arindhanan - உள்ளபடியே அறியப்பெற்றேன்;
நீ,Nee - பரம காருணிகனான நீ
என்னையும் அகற்றி,Ennaiyum akatri - அடியேனையும் உன் பக்கலில் நின்றும் அகலச்செய்து
அரு சேற்றில்,Aru setril - கால்வாங்கிக் கரையேற முடியாத விஷயங்களாகிற சேற்றிலே
வீழ்த்தி கண்டாய்,Veezhthi kandaay - தள்ளிவைக்கின்றாயே!