| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3192 | திருவாய்மொழி || (5-7-நோற்ற நோன்பிலேன்) (வானமாமலைப் பெருமானது அருளை வேண்டல் (சிரீவரமங்கலம்)) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –ஏதேனும் துர்த் தசையிலும் உன் திருவடிகளே சரணம் என்று இருக்கும் படி என்னைப் பண்ணி யருளின இம் மஹா யுபகாரத்துக்கு பிரதியுபகாரத்துக்கு இல்லை என்கிறார் .) 10 | ஆறெனக்கு நின் பாதமே சரணாகத் தந்தொழிந்தாய் உனக் கோர் கைம் மாறு நான் ஒன்றிலேன் என தாவியும் உனதே சேறு கொள் கரும்பும் பெருஞ் செந்நெலும் மலி தண் சிரீவர மங்கை நாறு பூந்தண் துழாய் முடியாய்! தெய்வ நாயகனே!–5-7-10 | சேறு கொள்,Seru kol - சேற்று நிலங்களிலே வளர்கின்ற கரும்பும்,Karumpum - கரும்புகளும் பெரு செந்நெலும்,Peru sennelum - பெரிய செந்நெற் பயிர்களும் மலி,Mali - மலிந்திருக்கப்பெற்ற தண்,Than - குளிர்ந்த சிரீவரமங்கை,Sreevaramangai - வானமாமலைப்பதியிலே (எழுந்தருளியிருக்கிற) நாறு பூ தண் துழய் முடியாய்,Naaru poo than thuzhai mudiyaay - பரிமளம் மிக்க திருத்துழாய் மாலையணிந்த திருமுடியையுடையவனே! தெய்வநாயகனே,Dheivanayakaney - தெய்நாயகப் பெருமானே! எனக்கு,Enakku - அடியேனுக்கு ஆறு,Aaru - உபாயமோவென்றால் நின் பாதமே சரண் ஆக,Nin paathame saran aaga - உன் திருவடிகளே உபாயமாக தந்தொழிந்தாய்,Thandhozindhaay - அநுக்ரஹித்து விட்டாய் (இந்த மஹோபகாரத்திற்கு) உனக்கு,Unakku - உன் விஷயத்திலே ஓர் கைம்மாறு ஒன்று நான் இலேன்,Or kaimmaaru ondru naan ilean - ஒரு பிரதியபகாரமு முடையேனல்லேன்; எனது ஆவியும்,Enadhu aaviyum - என்னுடைய ஆத்மாவும் உனதே,Unadhey - ஏற்கனவே உன்னுடையதாயிரா நின்றது. |