Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3193 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3193திருவாய்மொழி || (5-7-நோற்ற நோன்பிலேன்) (வானமாமலைப் பெருமானது அருளை வேண்டல் (சிரீவரமங்கலம்)) (ஸ்ரீ பன்னீராயிரப்படி –அநந்தரம் இத்திருவாய்மொழியைப் பாட வல்லவர்கள் நித்ய ஸூ ரிகளுக்கு நிரந்தர போக்யராவார்கள் என்று பலத்தை அருளிச் செய்கிறார்.) 11
தெய்வ நாயகன் நாரணன் திரிவிக்கிரமன் அடியிணை மிசைக்
கொய் கொள் பூம் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன்
செய்த ஆயிரத்துள்ளிவை தண் சிரீவர மங்கை மேய பத்துடன்
வைகல் பாடவல்லார் வானோர்க்கு ஆராவமுதே.–5-7-11
தெய்வநாயகன் நாரணன் திரிவிக்கிரமன்,Dheivanayakan Naranan Thirivikkiraman - எம்பெருமானுடைய
அடி இணை மிசை,Adi inai misai - உபய பாதங்களிலே,
கொய் கொள் பூ பொழில் சூழ் குருகூர் சடகோபன்,Koi kol poo pozhil soo zhul kuru kur sadagopan - ஆழ்வார்
செய்த,Seydha - அருளிச் செய்த
ஆயிரத்துள்,Aayiraththul - ஆயிரத்தினுள்ளே
இவை,Ivai - இந்த
தண் சிரீவர மங்கை மேய பத்து,Than Sreevara Mangai meya paththu - வானமாமலைப்தி விஷயமான பதிகத்தை
உடன்,Udan - கருத்துடனே
வைகல்,Vaigal - எப்போதும்
பாட வல்லார்,Paada vallaar - பாட வல்லவர்கள்
வானோர்க்கு,Vaanorkku - நித்ய ஸூரிகளுக்கு
ஆரா அமுது,Aaraa amuthu - ஆராவமுதமாயிருப்பர்கள்.