| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3193 | திருவாய்மொழி || (5-7-நோற்ற நோன்பிலேன்) (வானமாமலைப் பெருமானது அருளை வேண்டல் (சிரீவரமங்கலம்)) (ஸ்ரீ பன்னீராயிரப்படி –அநந்தரம் இத்திருவாய்மொழியைப் பாட வல்லவர்கள் நித்ய ஸூ ரிகளுக்கு நிரந்தர போக்யராவார்கள் என்று பலத்தை அருளிச் செய்கிறார்.) 11 | தெய்வ நாயகன் நாரணன் திரிவிக்கிரமன் அடியிணை மிசைக் கொய் கொள் பூம் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் செய்த ஆயிரத்துள்ளிவை தண் சிரீவர மங்கை மேய பத்துடன் வைகல் பாடவல்லார் வானோர்க்கு ஆராவமுதே.–5-7-11 | தெய்வநாயகன் நாரணன் திரிவிக்கிரமன்,Dheivanayakan Naranan Thirivikkiraman - எம்பெருமானுடைய அடி இணை மிசை,Adi inai misai - உபய பாதங்களிலே, கொய் கொள் பூ பொழில் சூழ் குருகூர் சடகோபன்,Koi kol poo pozhil soo zhul kuru kur sadagopan - ஆழ்வார் செய்த,Seydha - அருளிச் செய்த ஆயிரத்துள்,Aayiraththul - ஆயிரத்தினுள்ளே இவை,Ivai - இந்த தண் சிரீவர மங்கை மேய பத்து,Than Sreevara Mangai meya paththu - வானமாமலைப்தி விஷயமான பதிகத்தை உடன்,Udan - கருத்துடனே வைகல்,Vaigal - எப்போதும் பாட வல்லார்,Paada vallaar - பாட வல்லவர்கள் வானோர்க்கு,Vaanorkku - நித்ய ஸூரிகளுக்கு ஆரா அமுது,Aaraa amuthu - ஆராவமுதமாயிருப்பர்கள். |