Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3194 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3194திருவாய்மொழி || 5-8 ஆரா அமுதே 1
ஆரா அமுதே! அடியேன் உடலம் நின்பால் அன்பாயே
நீராய் அலைந்து கரைய உருக்கு கின்ற நெடுமாலே!
சீரார் செந்நெல் கவரி வீசும் செழுநீர்த் திருக்குடந்தை
ஏரார் கோலம் திகழக் கிடந்தாய் கண்டேன் எம்மானே–5-8-1
ஆரா அமுதே,ara amuthe - எவ்வளவு அநுபவித்தாலும் திருப்தியிறவாத அமுதமாகிய
எம்மானே,emmane - எம்பெருமானே!
அடியேன் உடலம்,adiyen udalam - என்னுடைய சரீரமானது
நின்பால்,ninpaal - உன் திறத்தில்
அன்பு ஆய் ஏ,anbu aay e - அன்புதானே வடிவெடுத்ததாகி
நீர் ஆய் அலைந்து,neer aay alainthu - நீர்ப்பண்டமாக உருகி வியாகுலப்பட்டு
கரைய,karaiya - கரையும்படியாக
உருக்குகின்ற நெடுமாலே,urukkukindra netumale - உருகப்பண்ணாநிற்கிற ஸர்வேச்வரனே!
சீர் ஆர் செந்நெல்,seer ar sennel - சீர்மைமிக்க செந்நெற்பயிர்கள்
சவரி வீசும்,savari veesum - சாமரம்போல் வீசப்பெற்று
செழுநீர்,sezhuneer - செழுமைதங்கிய தீர்த்தங்களையுடைத்தான
திருகுடந்தை,thirukudandhai - திருக்குடந்தையிலே
ஏர் ஆர் கோலம் திகழ,er ar kolam thigazha - அழகு பொருந்திய திருமேனி விளங்க
கிடந்தாய்,kitandhai - சாய்ந்தருளினாய் (அவ்வழகை)
கண்டேன்,kanden - ஸேவிக்கப் பெற்றேன்