| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3195 | திருவாய்மொழி || 5-8 ஆரா அமுதே 2 | எம்மானே! என் வெள்ளை மூர்த்தி! என்னை ஆள்வானே எம்மா உருவும் வேண்டு மாற்றால் ஆவாய்! எழிலேறே! செம்மா கமலம் செழுநீர் மிசைக் கண் மலரும் திருக் குடந்தை அம்மா மலர்க் கண் வளர்கின்றானே! என் நான் செய்கேனே?–5-8-2 | எம்மானே,emmane - எல்லாவிதத்திலும் மஹானானவனே! என் வெள்ளை மூர்த்தி,en vellai moorthi - என்னை ஈடுபடுத்திக்கொண்ட பரிசுத்த ஸ்வரூபனே! என்னை ஆள்வானே,ennai aalvane - என்னை அடிமை கொள்பவனே! வேண்டும் ஆற்றால்,vendum aatral - திருவுள்ளமானபடியே எம் மா உருவும் ஆவாய்,em ma uruvum aavay - எப்படிப்ப்ட அவதார விக்ரஹங்களையும் பரிக்ரஹிப்பவனே! மா செம் கமலம்,ma sem kamalam - பெரிய செந்தாமரைகள் செழுநீர் மிசை,cezhuneer misai - அழகிய நீரினிடத்து கண்,kan - கண்டவிடமெங்கும் மலரும்,malarum - மலரப்பெற்ற திருகுடந்தை,thirukudandhai - திருக்குடந்தையிலே அ மா மலர்,a ma malar - அப்படிப்பட்ட சிந்த மலர்போன்ற திருக்கண்கள் துயில்பவனே! தான் என் செய்கேன்,than en seykayn - நான் என்ன பண்ணுலேன்! (இவ்வழகு கண்டு என்னால் தரிக்கப்போகிறதில்லையே’ |