| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3196 | திருவாய்மொழி || 5-8 ஆரா அமுதே 3 | என்னான் செய்கேன் யாரே களை கண் என்னை என் செய்கின்றாய் உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன் கன்னார் மதிள் சூழ் குடந்தைக் கிடந்தாய் அடியேன் அரு வாணாள் செந்நாள் எந்நாள் அந்நாள் உன தாள் பிடித்தே செலக் காணே.–5-8-3 | நான் என் செய்கேன்,naan en seykayn - அடியேன் என்ன செய்வேன்! களைகண் யாரே,kalai kan yaare - ரக்ஷகராவார் யாவர்! என்னை என் செய்கின்றாய்,ennai en seykinraay - என்னை என்ன செய்வதாக இருக்கிறாய்? உன்னால் அல்லால்,unnal allaal - உன்னைத் தவிர்த்து யாவராலும்,yaavaraalum - வேறு ஒருவிதமான உபாயத்தாலும் குறை ஒன்றும் வேண்டேன்,kurai onrum venden - சிறிதும் அபேக்ஷையடையேனல்லேன் கன் ஆர் மதில் சூழ் குடந்தை கிடந்தாய்,kan ar madil soozh kudandhai kitandhay - வேலைப்பாடு பொருந்திய மதிள்சூழ்ந்த திருக்குடந்தையிலே சயனித்தருள்பவனே! அடியேன்,adiyen - அடியேனுடைய அரு,aru - ஆத்மாவானது வாழ்நாள்,vaalnaal - வாழும் காலத்தில் செல் நாள் எ நாள்,sel naal e naal - கழிகின்ற நாள்கள் எத்தனைநாளோ அ நான்,a naan - அந்த நாள்களெல்லாம் உன் தாய் பிடித்தே,un thay pitithey - உனது திருவடிகளைப் பற்றிக்கொண்டே செல,cel - நடக்கும்படி காண்,kaan - நடாக்ஷித்தருளவேணும். |