Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3196 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3196திருவாய்மொழி || 5-8 ஆரா அமுதே 3
என்னான் செய்கேன் யாரே களை கண் என்னை என் செய்கின்றாய்
உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன்
கன்னார் மதிள் சூழ் குடந்தைக் கிடந்தாய் அடியேன் அரு வாணாள்
செந்நாள் எந்நாள் அந்நாள் உன தாள் பிடித்தே செலக் காணே.–5-8-3
நான் என் செய்கேன்,naan en seykayn - அடியேன் என்ன செய்வேன்!
களைகண் யாரே,kalai kan yaare - ரக்ஷகராவார் யாவர்!
என்னை என் செய்கின்றாய்,ennai en seykinraay - என்னை என்ன செய்வதாக இருக்கிறாய்?
உன்னால் அல்லால்,unnal allaal - உன்னைத் தவிர்த்து
யாவராலும்,yaavaraalum - வேறு ஒருவிதமான உபாயத்தாலும்
குறை ஒன்றும் வேண்டேன்,kurai onrum venden - சிறிதும் அபேக்ஷையடையேனல்லேன்
கன் ஆர் மதில் சூழ் குடந்தை கிடந்தாய்,kan ar madil soozh kudandhai kitandhay - வேலைப்பாடு பொருந்திய மதிள்சூழ்ந்த திருக்குடந்தையிலே சயனித்தருள்பவனே!
அடியேன்,adiyen - அடியேனுடைய
அரு,aru - ஆத்மாவானது
வாழ்நாள்,vaalnaal - வாழும் காலத்தில்
செல் நாள் எ நாள்,sel naal e naal - கழிகின்ற நாள்கள் எத்தனைநாளோ
அ நான்,a naan - அந்த நாள்களெல்லாம்
உன் தாய் பிடித்தே,un thay pitithey - உனது திருவடிகளைப் பற்றிக்கொண்டே
செல,cel - நடக்கும்படி
காண்,kaan - நடாக்ஷித்தருளவேணும்.