| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3197 | திருவாய்மொழி || 5-8 ஆரா அமுதே 4 | செலக் காண்கிற்பார் காணு மளவும் செல்லும் கீர்த்தியாய்! உலப்பிலானே! எல்லா உலகு முடைய ஒருமூர்த்தி! நலத்தால் மிக்கார் குடந்தைக் கிடந்தாய்! உன்னைக் காண்பான் நான் அலப்பாய் ஆகாசத்தை நோக்கி அழுவன் தொழுவனே.–5-8-4 | செல காண்கிற்பார்,cel kaankirpar - மேலே மேலே காணவல்லவர்கள் காணும் அளவும்,kaanum alavum - எவ்வளவு காண்பர்பளோ அவ்வளவும் செல்லும் கீர்த்தியாய்,cellum keertiyay - வளர்ந்துசெல்கின்ற திருக்குணங்களையுடையவனே! கிடந்தாய்,kitandhay - சயனித்தருள்பவனே! நான் உன்னை காண்பான் அலப்பு ஆய்,naan unnai kaanpaan alappu aay - என் உன்னைக்காண வேண்டி அமைந்து உலப்பு இலானே,ulappu ilaane - அந்தத் திருக்குணங்கட்கு முடிவு இல்லாதவனே! எல்லா உலகும் உடைய,ella ulagum udaiya - எல்லாவுலகங்களுக்கும் ஸ்வாமியான ஒரு மூர்த்தி,oru moorthi - ஒப்பற்ற தலைவனே! நலத்தால் மிக்கார் குடந்தை,nalathaal mikkar kudandai - பக்திமிகுந்தவர்கள் வாழ்கின்ற திருக்குடந்தையிலே ஆகாசத்தை நோக்கி,aakaasathai nokki - (நீ வருதற்குரிய) வானத்தைப்பார்த்து அழுவன் தொழுவன்,azhuvan thozhuvan - அழுவதும் தொழுவதும் செய்யாநின்றேன். |