| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3198 | திருவாய்மொழி || 5-8 ஆரா அமுதே 5 | அழுவன் தொழுவன் ஆடிக் காண்பான் பாடி அலற்றுவன் தழுவல் வினையால் பக்கம் நோக்கி நாணிக் கவிழ்ந்திருப்பன் செழு வொண் பழனக் குடந்தைக் கிடந்தாய்! செந்தாமரைக் கண்ணா! தொழுவனேனை உன தாள் சேரும் வகையே சூழ் கண்டாய்.–5-8-5 | செழு ஒண் பழனம்,sezu on palanam - செழுமைதங்கிய நீர்நிலங்களையுடைய குடந்தை கிடந்தாய்,kudandai kitandhay - திருக்குடந்தையிலே சயனித்தருள்பவனே! செம் தாமரை கண்ணா,sem thaamarai kannaa - செந்தாமரை மலர்போன்ற திருக்கண்களையுடையவனே! அழுவன் தொழுவன்,azhuvan thozhuvan - அழுவேன் தொழுவேன்; ஆடி காண் பன்,aadi kaan pan - கடனம் செய்து பார்ப்பேன்; பாடி அலற்றுவன்,Paadi alattruvan - வாயாரப்பாடிப் பிரலாபனம் செய்வேன்; தழு வல்வினையால்,thazhu valvinaiyaal - என்னைத் தழுவிக்கொண்டிருக்கிற வலிய பாவத்தினாலே பக்கம் நோக்கி,pakkam nokki - (எந்தப்பக்கமாக நீவருகிறாயோவென்று) பக்கந்தோறும் பார்த்து (எங்கும் வரக்காணாமையாலே) காணி கவிழ்ந்து இருப்பன் தொழுவனேனை,kaani kavilnthu iruppan thozhuvane'nai - வெட்கப்பட்டுத் தலைகவிழ்ந்திருப்பேன்; உன தாள் சேரும் வகையே,un thaal serum vakaiye - உன் திருவடியடையமாறு சூழ் கண்டாய்,soozh kandai - உபாயசிந்தை பண்ணவேணும். |