Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3199 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3199திருவாய்மொழி || 5-8 ஆரா அமுதே 6
சூழ் கண்டாய் என் தொல்லை வினையை அறுத்துன்னடி சேறும்
ஊழ் கண்டிருந்தே தூராக் குழி தூர்த்து எனை நாளகன்றிருப்பன்
வாழ் தொல் புகழார் குடந்தைக் கிடந்தாய்! வானோர் கோமானே!
யாழி னிசையே! அமுதே! அறிவின் பயனே! அரிஏறே!–5-8-6
வாழ் தொல் புகழார் குடந்தை,vaal thol pugazhaar kudandhai - விளங்குகின்ற அகாதியான புகழையுடையார் வர்த்திக்கிற திருக்குடந்தையிலே
கிடந்தாய்,kitandhay - சயனித்தருள்பவனே!
வானோர் கோமானே,vaanoor komaane - நித்யஸூரிகாதனே!
யாழின் இசையே,yaazhin isaiye - வீணாகானம்போலே பரம் போக்யனானவனே!
அமுதே,amuthe - அமிருதம் போன்றவனே!
அறிவின் பயனே,arivin payane - அறிவுக்கும் பலனானவனே!
அரி ஏறே,Ari ere - சிங்கமும் கஇடபமும் போன்று சிறந்தவனே!
உன் அடி சேரும் ஊழ் கண்டு இருந்தே,un adi serum ooz kandu irunthe - நான் உனது திருவடிகளையடையும்படியான முறைமையைக் கண்டிருந்தும்
தூரா குழி தூர்த்து,thura kuzhi thuruthu - ஒருநாளும் தூர்க்கவொண்ணாத இந்திரியக்குழிகளை நிறைத்துக்கொண்டு
எனை நாள்,enai naal - எத்தனை காலம்
அகன்று இருப்பன்,agandru iruppan - உன்னைவிட்டுப் பிரிந்திருப்பேன்!
எளன் தொல்லை வினையை அறுத்து,elan tollai vinaiyai aruthu - (இப்படி அகன்றிருக்கைக்குக்காரணமான) எனது அநாதி பாபங்களைத் தொலைத்து
சூழ் கண்டாய்,soozh kandai - என்னை ஸ்வீகரித்தருள வேணும்.