திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2 · அடைவு
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3199 | திருவாய்மொழி || 5-8 ஆரா அமுதே 6 | சூழ் கண்டாய் என் தொல்லை வினையை அறுத்துன்னடி சேறும்
ஊழ் கண்டிருந்தே தூராக் குழி தூர்த்து எனை நாளகன்றிருப்பன்
வாழ் தொல் புகழார் குடந்தைக் கிடந்தாய்! வானோர் கோமானே!
யாழி னிசையே! அமுதே! அறிவின் பயனே! அரிஏறே!–5-8-6 | பதவுரை Show / Hideவாழ் தொல் புகழார் குடந்தை,vaal thol pugazhaar kudandhai - விளங்குகின்ற அகாதியான புகழையுடையார் வர்த்திக்கிற திருக்குடந்தையிலே கிடந்தாய்,kitandhay - சயனித்தருள்பவனே! வானோர் கோமானே,vaanoor komaane - நித்யஸூரிகாதனே! யாழின் இசையே,yaazhin isaiye - வீணாகானம்போலே பரம் போக்யனானவனே! அமுதே,amuthe - அமிருதம் போன்றவனே! அறிவின் பயனே,arivin payane - அறிவுக்கும் பலனானவனே! அரி ஏறே,Ari ere - சிங்கமும் கஇடபமும் போன்று சிறந்தவனே! உன் அடி சேரும் ஊழ் கண்டு இருந்தே,un adi serum ooz kandu irunthe - நான் உனது திருவடிகளையடையும்படியான முறைமையைக் கண்டிருந்தும் தூரா குழி தூர்த்து,thura kuzhi thuruthu - ஒருநாளும் தூர்க்கவொண்ணாத இந்திரியக்குழிகளை நிறைத்துக்கொண்டு எனை நாள்,enai naal - எத்தனை காலம் அகன்று இருப்பன்,agandru iruppan - உன்னைவிட்டுப் பிரிந்திருப்பேன்! எளன் தொல்லை வினையை அறுத்து,elan tollai vinaiyai aruthu - (இப்படி அகன்றிருக்கைக்குக்காரணமான) எனது அநாதி பாபங்களைத் தொலைத்து சூழ் கண்டாய்,soozh kandai - என்னை ஸ்வீகரித்தருள வேணும். |