| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3200 | திருவாய்மொழி || 5-8 ஆரா அமுதே 7 | அரியேறே! என்னம் பொற் சுடரே! செங்கட் கருமுகிலே! எரியேய் பவளக்குன்றே! நால்தோள் எந்தாய்! உனதருளே பிரியா அடிமை என்னைக் கொண்டாய்! குடந்தைத் திருமாலே! தரியேன் இனி உன் சரணம் தந்து என் சன்மம் களையாயே.–5-8-7 | அரி ஏறே,Ari ere - சிறந்த சிங்கமே! ஏன்,en - நான் அனுபவித்தற்குரிய அம் பொன் சுடரே,am pon sudare - அழகிய பொன்போன்ற ஒளியுருவனே! செம் கண் கரு முகிலே,sem kan karu mugile - சிவந்த கண்களையுடைய காளமேகம் போன்றவனே! எரி ஏய் பவளம் குன்றே,eri aye pavalam kunre - நக்ஷத்திர மண்டலத்தளவும் ஓங்கின பவளமலைபோன்றவனே! நால் தோள் எந்தாய்,nal thol endhay - சதுர்ப்புஜ ஸ்வாமியே! உனது அருகே,unathu aruke - உனது கிருபையினாலர் என்னை பீரியா அடிமை கொண்டாய்,ennai peeriya adimai kondai - என்னை அத்தாணிச் சேவகங் கொண்டவனே! குடந்தை திருமாலே,kudandai thirumale - திருக்குடந்தையில் வாழும் திருமாலே! இனி தரியேன்,ini thariyane - இனிமேல் தரித்திருக்ககில்லேன்! உன் சரணம் தந்து,un sarannam thandu - உனது திருவடிகளைக் கொடுத்தருளி என் சன்மம் களையாய்,en sanmam kalaiyaay - எனது சரீரத்தொடர்பைத் தவிர்த்தருளவேணும். |