Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3200 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3200திருவாய்மொழி || 5-8 ஆரா அமுதே 7
அரியேறே! என்னம் பொற் சுடரே! செங்கட் கருமுகிலே!
எரியேய் பவளக்குன்றே! நால்தோள் எந்தாய்! உனதருளே
பிரியா அடிமை என்னைக் கொண்டாய்! குடந்தைத் திருமாலே!
தரியேன் இனி உன் சரணம் தந்து என் சன்மம் களையாயே.–5-8-7
அரி ஏறே,Ari ere - சிறந்த சிங்கமே!
ஏன்,en - நான் அனுபவித்தற்குரிய
அம் பொன் சுடரே,am pon sudare - அழகிய பொன்போன்ற ஒளியுருவனே!
செம் கண் கரு முகிலே,sem kan karu mugile - சிவந்த கண்களையுடைய காளமேகம் போன்றவனே!
எரி ஏய் பவளம் குன்றே,eri aye pavalam kunre - நக்ஷத்திர மண்டலத்தளவும் ஓங்கின பவளமலைபோன்றவனே!
நால் தோள் எந்தாய்,nal thol endhay - சதுர்ப்புஜ ஸ்வாமியே!
உனது அருகே,unathu aruke - உனது கிருபையினாலர்
என்னை பீரியா அடிமை கொண்டாய்,ennai peeriya adimai kondai - என்னை அத்தாணிச் சேவகங் கொண்டவனே!
குடந்தை திருமாலே,kudandai thirumale - திருக்குடந்தையில் வாழும் திருமாலே!
இனி தரியேன்,ini thariyane - இனிமேல் தரித்திருக்ககில்லேன்!
உன் சரணம் தந்து,un sarannam thandu - உனது திருவடிகளைக் கொடுத்தருளி
என் சன்மம் களையாய்,en sanmam kalaiyaay - எனது சரீரத்தொடர்பைத் தவிர்த்தருளவேணும்.