| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3201 | திருவாய்மொழி || 5-8 ஆரா அமுதே 8 | களைவாய் துன்பம் களையா தொழிவாய் களை கண் மற்றிலேன் வளைவாய் நேமிப் படையாய்! குடந்தைக் கிடந்தாய்! மாமாயா! தளரா உடலம் என தாவி சரிந்து போம் போது இளையா துன தாள் ஒருங்கப் பிடித்துப் போத இசை நீயே.–5-8-8 | வளைவாய் நேமிபடையாய்,valaivay nemipadaiyaay - வளைந்த வாயையுடைய திருவாழியை ஆயுதமாகவுடையவனே! குடந்தை கிடந்த,kudandai kitandha - திருக்குடந்தையிலே சயனித்தருள்கின்ற மா மாயா,ma maaya - மஹாச்சர்யரூபனே! துன்பம் களைவாய்,thunbam kalivaay - எனது துன்பங்களை நீ களைந்தாலும் சரி களைமா தொழிவாய்,kalaimaa thozhivaay - களையாவிட்டாலும் சரி களைகண் மற்று இலேன்,kalaikan matru ilen - வேறு சரணமுடையேனல்லேன்; உடலும் தளரா,udalum thalarā - உடல் தளர்ந்து எனது ஆவி,enathu aavi - என் உயிரானது சரிந்து பொம் போது,sarindhu pom podhu - நிலைகுலைந்து உத்க்ரமணமடையும்போது இளையாது,ilaiyathu - மெலியாமல் உன் தான்,un thaan - உன் திருவடிகளையே ஒருங்க பிடிந்து போது,orungga pitinthu pothu - ஒருமிக்கப் பிடித்துப் போகும்படி நீயே இசை,neeye isai - நீயே திருவுள்ளம்பற்ற வேணும். |