| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3202 | திருவாய்மொழி || 5-8 ஆரா அமுதே 9 | இசைவித் தென்னை உன் தாளிணைக் கீழ் இருத்தும் அம்மானே! அசைவில் அமரர் தலைவர் தலைவா! ஆதிப் பெரு மூர்த்தி! திசைவில் வீசும் செழுமா மணிகள் சேரும் திருக்குடந்தை அசைவில் உலகம் பரவக் கிடந்தாய்! காண வாராயே.–5-8-9 | என்னை,ennai - நெடுநாள் விமுகனாயிருன்னத வென்னை இசைவித்து,isaivithu - அடிமைக்கு இசையும்படி செய்து உன் தாள் இணை கீழ்,un thaal inai keel - உனது உபயபாதங்களின் கீழே இருந்தும் அம்மானே,irundhum ammaane - தங்கும்படி செய்தருளின ஸ்வாமியே! அசைவு இல் அமரர் தலைவர்,asaivu il amarar thalaivar - நித்யஸூரிகளுக்குள் தலைவரான அநந்தகருடவிஷ்வக்ஸேனர்களுக்கும் தலைவா,thalaiva - முதல்வனே! ஆதி பெரு மூர்த்தி,aadhi peru moorthi - ஸகலஜகத்காரணபூசமான திவ்ய விக்ரஹத்தையுடையவனே! திசை வில் வீசும் செழுமா மனிகள் சேரும்,disai vil veesum sezuma maniḵaḷ cerum - எங்கம் ஒளிவீசுகின்ற மிகச்சிறந்த ரத்னங்கள் சேருமிடமான திரு குடந்தை,tiru kutantai - திக்குடந்தையிலே அசைவு இல்,asaivu il - ஓய்வில்லாதபடி (அவதாரம்) உலகம் பரவ,ulagam parava - உலகமெல்லாம் துதிக்கும் படி கிடந்தாய்,kitandhay - சயனித்தருள்பவனே! காண வாராய்,kaana vaaraay - நான்கண்டு அநுபவிக்கும்படி வரவேணும் |