Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3202 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3202திருவாய்மொழி || 5-8 ஆரா அமுதே 9
இசைவித் தென்னை உன் தாளிணைக் கீழ் இருத்தும் அம்மானே!
அசைவில் அமரர் தலைவர் தலைவா! ஆதிப் பெரு மூர்த்தி!
திசைவில் வீசும் செழுமா மணிகள் சேரும் திருக்குடந்தை
அசைவில் உலகம் பரவக் கிடந்தாய்! காண வாராயே.–5-8-9
என்னை,ennai - நெடுநாள் விமுகனாயிருன்னத வென்னை
இசைவித்து,isaivithu - அடிமைக்கு இசையும்படி செய்து
உன் தாள் இணை கீழ்,un thaal inai keel - உனது உபயபாதங்களின் கீழே
இருந்தும் அம்மானே,irundhum ammaane - தங்கும்படி செய்தருளின ஸ்வாமியே!
அசைவு இல் அமரர் தலைவர்,asaivu il amarar thalaivar - நித்யஸூரிகளுக்குள் தலைவரான அநந்தகருடவிஷ்வக்ஸேனர்களுக்கும்
தலைவா,thalaiva - முதல்வனே!
ஆதி பெரு மூர்த்தி,aadhi peru moorthi - ஸகலஜகத்காரணபூசமான திவ்ய விக்ரஹத்தையுடையவனே!
திசை வில் வீசும் செழுமா மனிகள் சேரும்,disai vil veesum sezuma maniḵaḷ cerum - எங்கம் ஒளிவீசுகின்ற மிகச்சிறந்த ரத்னங்கள் சேருமிடமான
திரு குடந்தை,tiru kutantai - திக்குடந்தையிலே
அசைவு இல்,asaivu il - ஓய்வில்லாதபடி (அவதாரம்)
உலகம் பரவ,ulagam parava - உலகமெல்லாம் துதிக்கும் படி
கிடந்தாய்,kitandhay - சயனித்தருள்பவனே!
காண வாராய்,kaana vaaraay - நான்கண்டு அநுபவிக்கும்படி வரவேணும்