திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3204 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3204திருவாய்மொழி || (5-8–ஆரா அமுதே) - (இப்பதிகம் பழூதறக் கற்கவல்லார் காமிநிகளுக்குக் காமுகர்போலே ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு யோக்யராவர் என்று பலனுரைத்துத் தலைக்கட்டுகிறார்) 11
உழலை என்பில் பேய்ச்சி முலை யூடு அவளை உயிர் உண்டான் கழல்கள் அவையே சரணாகக் கொண்ட குருகூர்ச் சடகோபன் குழலின் மலியச் சொன்ன ஓர் ஆயிரத்துள் இப் பத்தும் மழலை தீர வல்லார் காமர் மானேய் நோக்கியர்க்கே.–5-8-11
பதவுரை Show / Hide
உழலை என் பின் பேய்ச்சி,uzhalai en pin peyschi - உழல்தடிபோன்ற எலும்புகளையுடைளான பூதனையினுடைய
முலை ஊடு,mulai oodu - முலை வழியாக
அவள் உயிரை உண்டான்,aval uyirai undaan - அவளது உயிரை முடித்த பெருமானுடைய
கழல்கள் அவையே,kazalkal avaiye - திருவடிகளையே
சரண் ஆக கொண்ட,saran aka konda - சரணமாகப்பற்றின
குகூர் சடகோபன்,kukoor sadagopan - ஆழ்வார்
குழலின் மலிய,kulalin maliya - குழலோசையித் காட்டிலும் இனிதாக
சொன்ன,sonna - அருளிச்செய்த
ஓர் ஆயிரத்துள்,or aayirattu - ஒப்பற்ற ஆயிரத்தினுள்ளே
இ பத்தும்,i pattum - இப்பதிகத்தை
மழலை தீர,malalai teera - தமது அறியாமை தொலையும்படி
வல்லார்,vallaar - அதிகரிக்கவல்லவர்கள்
மான் ஏய் நோக்கியர்க்கு,maan aay nokkiyarkku - மான்போன்ற நோக்கையுடைய திவ்யாப்ஸரன்ஸுக்களுக்கு
காமர்,kaamar - ஆதரிக்கத்தக்கவராவர்.