திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3204 | திருவாய்மொழி || (5-8–ஆரா அமுதே) - (இப்பதிகம் பழூதறக் கற்கவல்லார் காமிநிகளுக்குக் காமுகர்போலே ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு யோக்யராவர் என்று பலனுரைத்துத் தலைக்கட்டுகிறார்) 11 | உழலை என்பில் பேய்ச்சி முலை யூடு அவளை உயிர் உண்டான்
கழல்கள் அவையே சரணாகக் கொண்ட குருகூர்ச் சடகோபன்
குழலின் மலியச் சொன்ன ஓர் ஆயிரத்துள் இப் பத்தும்
மழலை தீர வல்லார் காமர் மானேய் நோக்கியர்க்கே.–5-8-11 | பதவுரை Show / Hideஉழலை என் பின் பேய்ச்சி,uzhalai en pin peyschi - உழல்தடிபோன்ற எலும்புகளையுடைளான பூதனையினுடைய முலை ஊடு,mulai oodu - முலை வழியாக அவள் உயிரை உண்டான்,aval uyirai undaan - அவளது உயிரை முடித்த பெருமானுடைய கழல்கள் அவையே,kazalkal avaiye - திருவடிகளையே சரண் ஆக கொண்ட,saran aka konda - சரணமாகப்பற்றின குகூர் சடகோபன்,kukoor sadagopan - ஆழ்வார் குழலின் மலிய,kulalin maliya - குழலோசையித் காட்டிலும் இனிதாக சொன்ன,sonna - அருளிச்செய்த ஓர் ஆயிரத்துள்,or aayirattu - ஒப்பற்ற ஆயிரத்தினுள்ளே இ பத்தும்,i pattum - இப்பதிகத்தை மழலை தீர,malalai teera - தமது அறியாமை தொலையும்படி வல்லார்,vallaar - அதிகரிக்கவல்லவர்கள் மான் ஏய் நோக்கியர்க்கு,maan aay nokkiyarkku - மான்போன்ற நோக்கையுடைய திவ்யாப்ஸரன்ஸுக்களுக்கு காமர்,kaamar - ஆதரிக்கத்தக்கவராவர். |