Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3204 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3204திருவாய்மொழி || 5-8 ஆரா அமுதே 11
உழலை என்பில் பேய்ச்சி முலை யூடு அவளை உயிர் உண்டான்
கழல்கள் அவையே சரணாகக் கொண்ட குருகூர்ச் சடகோபன்
குழலின் மலியச் சொன்ன ஓர் ஆயிரத்துள் இப் பத்தும்
மழலை தீர வல்லார் காமர் மானேய் நோக்கியர்க்கே.–5-8-11
உழலை என் பின் பேய்ச்சி,uzhalai en pin peyschi - உழல்தடிபோன்ற எலும்புகளையுடைளான பூதனையினுடைய
முலை ஊடு,mulai oodu - முலை வழியாக
அவள் உயிரை உண்டான்,aval uyirai undaan - அவளது உயிரை முடித்த பெருமானுடைய
கழல்கள் அவையே,kazalkal avaiye - திருவடிகளையே
சரண் ஆக கொண்ட,saran aka konda - சரணமாகப்பற்றின
குகூர் சடகோபன்,kukoor sadagopan - ஆழ்வார்
குழலின் மலிய,kulalin maliya - குழலோசையித் காட்டிலும் இனிதாக
சொன்ன,sonna - அருளிச்செய்த
ஓர் ஆயிரத்துள்,or aayirattu - ஒப்பற்ற ஆயிரத்தினுள்ளே
இ பத்தும்,i pattum - இப்பதிகத்தை
மழலை தீர,malalai teera - தமது அறியாமை தொலையும்படி
வல்லார்,vallaar - அதிகரிக்கவல்லவர்கள்
மான் ஏய் நோக்கியர்க்கு,maan aay nokkiyarkku - மான்போன்ற நோக்கையுடைய திவ்யாப்ஸரன்ஸுக்களுக்கு
காமர்,kaamar - ஆதரிக்கத்தக்கவராவர்.