| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3205 | திருவாய்மொழி || 5-9–மானேய் நோக்கு) (திருவல்லவாழ் செல்லுதலைத் தடுக்கும் தோழியர்க்குத் தலைவி கூறுதல்.) (ஸ்ரீ பன்னீராயிரப்படி –முதல் பாட்டில் நிரதிசய போக்யமான சோலையையுடைய திரு வல்ல வாழிலே எழுந்து அருளி இருக்கிற நிருபாதிக ஸ்வாமி திருவடிகளைக் கிட்டுவது என்றோ என்று தோழிமாரைக குறித்துச் சொல்லுகிறாள்.) 1 | மானேய் நோக்கு நல்லீர்! வைகலும் வினையேன் மெலிய வானார் வண் கமுகும் மது மல்லிகை கமழும் தேனார் சோலைகள் சூழ் திரு வல்லவாழ் உறையும் கோனாரை அடியேன் அடி கூடுவது என்று கொலோ?–5-9-1 | மான் ஏய் நோக்கு நல்லீர்,Maan ey nokku nalleer - மான் போன்ற நோக்கையுடைய பெண்களே! வினையேன்,Vinaiyen - பாவியான நான் வைகலும் மெலிய,Vaigalum meliya - எப்போதும் இளைக்கும்படியாக, வான் ஆர்வண் கமுகும்,Vaan aarvan Kamookum - ஆகாசத்தை யளாவிய அழகிய அழகிய பாக்மரங்களும் மது மல்லிகை,Mathu malligai - மதுவொழுகுகின்ற மல்லிகை மலர்களும். கமழும்,Kamazhum - வாஸிக்கப்பெற்ற தேன் ஆர் சோலைகள் சூழ்,Thenar solaigal soozh - தேன் நிரம்பிய சோலைகளால் சூழப்பட்ட திரு வல்ல வாழ்,Thiru valla vaazh - திருவல்லவாழிலே உறையும்,Uraiyum - நித்யவாஸம் பண்ணுகிற கோனாரை அடி,Konaarai adi - ஸ்வாமியின் திருவடிகளை அடியேன் கூடுவது என்று சொல்,Adiyen kooduvadhu endru sol - அடியேன் கூடப்பெறுவது என்றைக்கோ? |