Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3206 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3206திருவாய்மொழி || 5-9–மானேய் நோக்கு) (திருவல்லவாழ் செல்லுதலைத் தடுக்கும் தோழியர்க்குத் தலைவி கூறுதல்.) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –தன்னுடைய உத்தியோகத்தை இசையாதே இருக்கிற தோழி மாரை அ நு நயித்து நான் திரு வல்ல வாழிலே புக்கு அவன் பாத ரேணுவைச் சூடுவது என்று என்கிறாள்) 2
என்று கொல் தோழி மீர்காள்! எம்மை நீர் நலிந்தென் செய்தீரோ!
பொன் திகழ் புன்னை மகிழ் புது மாதவி மீதணவித்
தென்றல் மணங் கமழும் திருவல்ல வாழ் நகருள்
நின்ற பிரான் அடி நீறு அடியோம் கொண்டு சூடுவதே.–5-9-2
தோழிமீர்காள்,Thozhimeerkaal - தோழிகளே!
நீர் எம்மை தலிந்து,Neer emmai thalindhu - நீங்கள் எம்மை வருத்தப்படுத்தி
என் செய்தீர்,En seydeer - என்ன காரியம் செய்தீர்கள்!
தென்றல்,Thendral - தென்றல் காற்றானது
பொன் திகழ் புள்ளை,Pon thigazh pullai - பொன்போல் விளங்குகிற தாதுகளையுடைய புன்னை மரங்களென்ன
மகிழ்,Magilz - மகிழமரங்களென்ன
புது மாதவி,Puthu maadhavi - புதிய குருக்கத்திகளென்ன
மீது அணவி,Meedhu anavi - ஆகிய இவற்றின் மேலே படிந்து
மணங்கமழும்,Manangamalzum - பரிமளத்தை வீசி உலாவிடமான
திருவல்லவாழ்நகரும்,Thiruvalaazhvaakarum - திருவல்லவாழ்ப்பதியிலே
நின்ற பிரான்,Nindra piran - நிலைபெற்றிருக்கிறஸ்வாமியினுடைய
அடி நீறு,Adi neeru - ஸ்ரீபாத ரேணுவை
அடியோம் கொண்டு சூடுவது,Adiyom kondhu sooduvadhu - அடியோம் ஸ்வீகரித்து அணிந்து கொள்வது
என்று கொல்,endru kol - என்றைக்கோ?