| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3210 | திருவாய்மொழி || 5-9–மானேய் நோக்கு) (திருவல்லவாழ் செல்லுதலைத் தடுக்கும் தோழியர்க்குத் தலைவி கூறுதல்.) (ஸ்ரீ பன்னீராயிரப்படி –அநந்தரம் -பாடுகிற வண்டும் புதுக் தென்றலுமான கடற்கரைச் சோலையையுடைய திரு வல்ல வாழிலே நிற்கிற ஆஸ்ரித அர்த்தமாக வர்த்தியான ஸ்ரீ வாமனனுடைய போக்யமான திருவடிகளைக் காண்பது என்றோ என்கிறாள்.) 6 | காண்ப தெஞ்ஞான்று கொலோ? வினையேன் கனிவாய் மடவீர்! பாண் குரல் வண்டினொடு பசுந் தென்றலுமாகி எங்கும் சேண் சினை ஓங்கு மரச் செழுங்கானல் திரு வல்லவாழ் மாண் குறள் கோலப் பிரான் மலர்த் தாமரைப் பாதங்களே.–5-9-6 | கனி காய் மடவீர்,Kani kaay madaveer - கனிபோன்ற வாயையுடைய தோழிகளே! எங்கும்,Engum - எங்குப்பார்த்தாலும் பாண் குரல் வண்டினோடு,Paan kural vandinodu - காளரூபமான மிடற்றோவரவையுடைய உண்டுகளும் பசுதென்றலும் ஆகி,Pasuthendralum aagi - புதுத்தென்றதுமாய் சேண் சினை ஓங்கு மரம்,Senn sinai oongu maram - உயர்ந்த பனைகளையுடைந்தாய்க்கொண்டு வளருகிற மாசுகளையுடைய செழு கானல் திருவல்லவாழ்,Sezu kaanal thiruvallazh - அழகிய கடற்கரைச் சோலையையுடைத்தான திருவல்லவாழிலே நிற்கிற மாண்குறள் கோலம் பிரான்,Maangkural kolam piran - சிறந்த ப்ரஹ்மசாரி வேஷத்தையுடையனான எம்பிரானுடைய தாமரை மணபாதங்கள்,Thaamarai manapadhangal - தாமரைமலர்போன்ற திருவடிகளை வினையேன்,Vinaiyen - பாவியாகிய நான் காண்பது,Kaanpadhu - ஸேவிக்கப்பெறுவது எஞ்ஞான்று கொலோ,Yennaanru kolo - என்றைக்கோ |