Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3211 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3211திருவாய்மொழி || 5-9–மானேய் நோக்கு) (திருவல்லவாழ் செல்லுதலைத் தடுக்கும் தோழியர்க்குத் தலைவி கூறுதல்.) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –திரு வல்ல வாழிலே நின்று அருளின எம்பெருமான் திருவடிகளில் நித்தியமாய் பூவை யணிந்து தொழ வல்லோமே என்கிறாள்.) 7
பாதங்கள் மேலணி பூந்தொழக் கூடுங்கொல்? பாவை நல்லீர்!
ஓத நெடுந் தடத்துள் உயர் தாமரை செங்கழுநீர்
மாதர்கள் வாண் முகமும் கண்ணும் ஏந்தும் திருவல்லவாழ்
நாதன் இஞ்ஞால முண்ட நம்பிரான் தன்னை நாடொறுமே.–5-9-7
பாவை கல்லீல்,Paavai kalleel - பாவைபோலே அழகிய தோழிகளே!
ஓதம் நெடு நடத்துள்,Otham netu nadathul - கடல்போன்று பெரிய தடாகங்களுக்குள்ளே
உயர் தாமரை செங்கழுவீர்,Uyar thaamarai sengazhuveer - உயர்ந்த தாமரைப் பூக்களும் செங்குழுநீர்ப்பூக்களும்
மாதர்கள் வான் முகமும் கண்களும் ஏந்தும்,Maadhargal vaan mugamum kangalum aendum - ஸ்திரீகளின் ஒளிபொருந்திய முகத்தழகையும் கண்ணழகையும் தாக்கும்படியான
காதல்,Kaadhal - தலைவனும்
இ ஞாலம் உண்ட, E gnaalam unda - இவ்வுலகங்களை யெல்லாம் பிரளங்கொள்ளாதபடி காத்தவனான
நம் பிரான் தன்னை,Nam piran thanai - எம்பெருமானுடைய
பாதங்கள் மேல் அணி,Paadhangal mel ani - திருவடிகளின் மேலே சாத்தின
பூ,Poo - புஷ்பங்களையாவது
நாள் தோறும் தொழ கூடும் கொல்,Naal thorum thoza koodum kol - நாடோறும் தொழ நேருமோ?