| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3211 | திருவாய்மொழி || 5-9–மானேய் நோக்கு) (திருவல்லவாழ் செல்லுதலைத் தடுக்கும் தோழியர்க்குத் தலைவி கூறுதல்.) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –திரு வல்ல வாழிலே நின்று அருளின எம்பெருமான் திருவடிகளில் நித்தியமாய் பூவை யணிந்து தொழ வல்லோமே என்கிறாள்.) 7 | பாதங்கள் மேலணி பூந்தொழக் கூடுங்கொல்? பாவை நல்லீர்! ஓத நெடுந் தடத்துள் உயர் தாமரை செங்கழுநீர் மாதர்கள் வாண் முகமும் கண்ணும் ஏந்தும் திருவல்லவாழ் நாதன் இஞ்ஞால முண்ட நம்பிரான் தன்னை நாடொறுமே.–5-9-7 | பாவை கல்லீல்,Paavai kalleel - பாவைபோலே அழகிய தோழிகளே! ஓதம் நெடு நடத்துள்,Otham netu nadathul - கடல்போன்று பெரிய தடாகங்களுக்குள்ளே உயர் தாமரை செங்கழுவீர்,Uyar thaamarai sengazhuveer - உயர்ந்த தாமரைப் பூக்களும் செங்குழுநீர்ப்பூக்களும் மாதர்கள் வான் முகமும் கண்களும் ஏந்தும்,Maadhargal vaan mugamum kangalum aendum - ஸ்திரீகளின் ஒளிபொருந்திய முகத்தழகையும் கண்ணழகையும் தாக்கும்படியான காதல்,Kaadhal - தலைவனும் இ ஞாலம் உண்ட, E gnaalam unda - இவ்வுலகங்களை யெல்லாம் பிரளங்கொள்ளாதபடி காத்தவனான நம் பிரான் தன்னை,Nam piran thanai - எம்பெருமானுடைய பாதங்கள் மேல் அணி,Paadhangal mel ani - திருவடிகளின் மேலே சாத்தின பூ,Poo - புஷ்பங்களையாவது நாள் தோறும் தொழ கூடும் கொல்,Naal thorum thoza koodum kol - நாடோறும் தொழ நேருமோ? |