Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3212 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3212திருவாய்மொழி || 5-9–மானேய் நோக்கு) (திருவல்லவாழ் செல்லுதலைத் தடுக்கும் தோழியர்க்குத் தலைவி கூறுதல்.) (ஸ்ரீ பன்னீராயிரப்படி –அநந்தரம் -அழகிய விளை நிலங்களாலே சூழப்பட்ட திரு வல்ல வாழிலே நித்ய வாசம் பண்ணுகிறவனுடைய சகல சம்ச்லேஷ ஸ்வ பாவமான திருவடிகளை நிரந்தர அனுபவம் பண்ணக் கூடுமோ என்கிறாள்.) 8
நாடொறும் வீடின்றியே தொழக் கூடுங்கொல் நன்னுதலீர்!
ஆடுறு தீங் கரும்பும் விளை செந் நெலுமாகி எங்கும்
மாடுறு பூந்தடஞ் சேர் வயல் சூழ் தண் திருவல்லவாழ்
நீடுறைகின்ற பிரான் நிலம் தாவிய நீள்கழலே.–5-9-8
நல் நுதநீர்,Nal nuthaneer - அழகிய நெறியையுடைய தோழிகளே!
எங்கும்,Engum - எவ்விடத்திலும்
ஆடு உறு தீம் கரும்பும்,Aadu uru theem karumbum - ஆலையிலிட்டு ஆடுதற்குரிய இனிமையான கரும்புகளும்
வினை செந்நெலும் ஆகி,Vinai chennelum aagi - முதிர விளைந்த செந்நெறி பயிர்களுமாய்
மாடு உறு பூ தடம் சேர்,Maadu uru poo thadam ser - பக்கங்களில் நெருங்கிய பூத்த தடாகங்களையுடைத்தாய்
வயல் சூழ்,Vayal soozh - கழனிகளாலே சூழப்பட்ட
தண் திருவல்லவாழ்,Tham thiruvallazh - குளிர்ந்த திருவல்ல வாழிலே
நீடு உறைகின்ற பிரான்,Neetu uraikindra piran - நித்யவாஸம் செய்தருளா நின்ற எம்பெருமானுடைய
நிலம் தாவிய நீள் கழல்,Nilam thaaviya neel kazhal - பூமி முழுவதையு மொருகால் தளந்துகொண்ட நீண்ட திருவடிகளை
நாள்தோறும் வீடு இன்றியே,Naal thorum veedu indriye - நாடோறும் விச்சேதமில்லாமல்
தொழ கூடும் கொல்,Thoza koodum kol - தொழ நேருமோ?