| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3213 | திருவாய்மொழி || 5-9–மானேய் நோக்கு) (திருவல்லவாழ் செல்லுதலைத் தடுக்கும் தோழியர்க்குத் தலைவி கூறுதல்.) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –நம்முடைய கழலுகிற வளைகள் பூர்ணமாம் படி-பூரிக்க – அவனைக் கண்டு தொழலாம் படி அவன் அருள் கூட வற்றே என்கிறாள் .) 9 | கழல் வளை பூரிப்ப நாம் கண்டு கை தொழக் கூடுங் கொலோ? குழல் என யாழும் என்னக் குளிர் சோலை யுள் தேனருந்தி மழலை வரி வண்டுகள் இசை பாடும் திருவல்லவாழ் சுழலின் மலி சக்கரப் பெருமானது தொல்லருளே.–5-9-9 | குளிர் சோலையுள்,Kulir solaiyul - குளிர்ந்த சோலைகளிலே தேன் அருந்தி,Then arunthi - மதுவைப் பருகி மழலை வரி வண்டுகள்,Mazhalai vari vandugal - மழலைத் தொனியையுடைய அழகிய வண்டுகள் குழல் என்ன யாழ் என்ன,Kuzhal enna yaazh enna - வேஸ கானமோ வீணா கானமோ என்னும்படியாக இசை பாலும்,Isai paalum - இசைபாடப்பெற்ற திருவல்லவாழ்,Thiruvallazh - திருவல்லவாழிலே சுழலின் மலி சக்கரம்,Suzhalin mali sakkarum - சுறுற்சி பொருந்திய திருவாழியையுடையனான பெருமானது,Perumaanadhu - ஸர்வேச்வரனுடைய தொல் அருளா,Tol arula - இயற்கையான திருவருளாலே சுழல் வனை பூரிப்ப யாம் கண்டு கை தொழ கூடும் கொல்,Suzhal vanai poorippa yaam kandu kai thozh koodum kol - சுழல் வளைகள் பூரிக்கும்படியாக நாம் கண்டு தொழநேருமோ |