Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3214 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3214திருவாய்மொழி || 5-9–மானேய் நோக்கு) (திருவல்லவாழ் செல்லுதலைத் தடுக்கும் தோழியர்க்குத் தலைவி கூறுதல்.) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –எம்பெருமானுடைய ஸ் வா பாவிகமான கிருபையால் -அவன் தன்னைக் காணப் பெற்று -ப்ரீதியாலே இனிதாய்க் கொண்டு திரு நாமங்களை சொல்லக் கூட வற்றோ -என்கிறாள் ) 10
தொல்லருள் நல் வினையால் சொலக் கூடுங்கொல்? தோழிமீர்காள்?
தொல்லருள் மண்ணும் விண்ணும் தொழ நின்ற திரு நகரம்
நல்லருள் ஆயிரவர் நலனேந்தும் திருவல்லவாழ்
நல்லருள் நம் பெருமான் நாராயணன் நாமங்களே.–5-9-10
தோழிமீர்களா,Thozhimeerkala - தோழிகளே
மண்ணும் விண்ணும்,Mannum vinnnum - உபயவிபூதியிலுள்ளாரும்
தொல் அருள்,Tol arul - தனது இயற்கைத் திருவருளை
தொழநின்றதிருநகரம்,Thozhannindha thirunagaram - கொண்டாடும்படி நிற்குமிடமாய்
நல் அருள் ஆயிரவர் நலன் ஏந்தும்,Nal arul aayiravar nalan endhum - மஹா தயாளுக்களான ஆயிரக்கணக்கான சிஷ்டர்கள் நன்மையோடு வர்த்திக்கு மிடமான
திருவல்லவாழ்,Thiruvallazh - திருவல்லவாழிஸேற்கிற
நல் அருள் நம் பெருமான் நாராயணன்,Nal arul nam perumaan narayanan - மஹாக்ருபாளுவாய் அஸ்மதீஸ்வாமியான நாராயணனுடைய
நாமங்கள்,Naamangal - திருநாமங்களை
தொல் அருள் நல் வினையால்,Tol arul nal vinaiyal - (அவனது) இற்றைக் திருவருளாகிற ஸுக்ருதலிரேஷத்தாலே
சொல் கூடும் கொல்,Sol koodum kol - நாம் சொல்லநேருமோ?