| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3214 | திருவாய்மொழி || 5-9–மானேய் நோக்கு) (திருவல்லவாழ் செல்லுதலைத் தடுக்கும் தோழியர்க்குத் தலைவி கூறுதல்.) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –எம்பெருமானுடைய ஸ் வா பாவிகமான கிருபையால் -அவன் தன்னைக் காணப் பெற்று -ப்ரீதியாலே இனிதாய்க் கொண்டு திரு நாமங்களை சொல்லக் கூட வற்றோ -என்கிறாள் ) 10 | தொல்லருள் நல் வினையால் சொலக் கூடுங்கொல்? தோழிமீர்காள்? தொல்லருள் மண்ணும் விண்ணும் தொழ நின்ற திரு நகரம் நல்லருள் ஆயிரவர் நலனேந்தும் திருவல்லவாழ் நல்லருள் நம் பெருமான் நாராயணன் நாமங்களே.–5-9-10 | தோழிமீர்களா,Thozhimeerkala - தோழிகளே மண்ணும் விண்ணும்,Mannum vinnnum - உபயவிபூதியிலுள்ளாரும் தொல் அருள்,Tol arul - தனது இயற்கைத் திருவருளை தொழநின்றதிருநகரம்,Thozhannindha thirunagaram - கொண்டாடும்படி நிற்குமிடமாய் நல் அருள் ஆயிரவர் நலன் ஏந்தும்,Nal arul aayiravar nalan endhum - மஹா தயாளுக்களான ஆயிரக்கணக்கான சிஷ்டர்கள் நன்மையோடு வர்த்திக்கு மிடமான திருவல்லவாழ்,Thiruvallazh - திருவல்லவாழிஸேற்கிற நல் அருள் நம் பெருமான் நாராயணன்,Nal arul nam perumaan narayanan - மஹாக்ருபாளுவாய் அஸ்மதீஸ்வாமியான நாராயணனுடைய நாமங்கள்,Naamangal - திருநாமங்களை தொல் அருள் நல் வினையால்,Tol arul nal vinaiyal - (அவனது) இற்றைக் திருவருளாகிற ஸுக்ருதலிரேஷத்தாலே சொல் கூடும் கொல்,Sol koodum kol - நாம் சொல்லநேருமோ? |