Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3215 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3215திருவாய்மொழி || 5-9–மானேய் நோக்கு) (திருவல்லவாழ் செல்லுதலைத் தடுக்கும் தோழியர்க்குத் தலைவி கூறுதல்.) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –இப்பத்தும் வல்லார் சம்சாரத்திலே இருந்து வைத்தே எல்லாரிலும் சிறந்தவர் என்கிறார்.) 11
நாமங் களாயிர முடைய நம் பெருமானடி மேல்
சேமங் கொள் தென் குருகூர்ச் சடகோபன் தெரிந்துரைத்த
நாமங்களாயிரத்துள் இவை பத்தும் திருவல்லவாழ்
சேமங்கொள் தென்னகர் மேல் செப்புவார் சிறந்தார் பிறந்தே.–5-9-11
நாமங்கள் ஆயிரம் உடைய,Naamangal aayiram udaiya - ஸஹஸஸ்தரநாமங்களையுடையனான
நம் பெருமான்,Nam perumaan - எம்பெருமானுடைய
அடிமேல்,Adimel - திருவடிகளின்மேலே
சேமம் கொள்,Semam kol - திண்ணிய அத்யவஸாய முடையவரான
தென் குருகூர் சடகோபன்,Then kurugoor sadagopan - ஆழ்வார்
தெரிந்து உரைத்த,Therindhu uraitha - ஆராய்ந்து அருளிச் செய்த
நாமக்கள் ஆயிரத்துள்,Namakal aayirathul - அவனது திருநாமம் போன்றதான ஆயிரத்தினுள்ளே
திருவல்லவாழ் சேமம் கொள் தென் நகர் மேல் இவை பத்தும்,Thiruvallazh semam kol then nagar mel ivai pattum - திருவல்லுலாழாகிற அரணமைந்த அழகிய திருப்பதி விஷயமான இப்பத்தையும்
செப்புவார்,Seppuvaar - ஓதவல்லவர்கள்
பிறந்தே,Piranthe - இவ்விருள் தருமா ஞாலத்தில் பிறந்து வைத்தே
சிறந்தார்,Sirandaar - சிறந்தவராவர்