| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3217 | திருவாய்மொழி || (5-10–பிறந்தவாறும் வளர்ந்தவாறும்) (ஆழ்வார் தாம் சேர்ந்து அனுபவிக்கும் நிலையைச் செய் என எம்பெருமானை வேண்டுதல்.) (ஸ்ரீ பன்னீராயிரப்படி –அபிமத விஷயத்தில் உன்னுடைய வியாபாரங்கள் என்னை சிதிலனாக்கா நின்றது என்கிறார்.) 2 | வதுவை வார்த்தையுள் ஏறு பாய்ந்ததும் மாய மாவினை வாய் பிளந்தும் மதுவை வார் குழலார் குரவை பிணைந்த குழகும் அது இது உது என்னலாவன அல்ல என்னை உன் செய்கை நைவிக்கும் முதுவைய முதல்வா! உனை என்று தலைப் பெய்வனே?–5-10-2 | வதுவை வார்த்தையுள்,Vadhu vai vaarthaiyul - விவாஹப்ரஸ்தாவத்திலே ஏறு பாய்ந்தனும்,Eru paaindhanum - விருஷங்களை மேல்விழுந்து கொன்றதும் மாயம் மாவினை,Maayam maavinai - கபடமாகக் ருதிரையுருக் கொண்டு வந்த அசுரனை வாய் பிளந்தும்,Vaai pilandhum - வாய்க்கீண்டு ஒழித்ததும் மதுவை வாதர் குழலார்,Madhuvai vaathar kuzhalaar - மதுவைப் பெருக்குகின்ற கூந்தலையுடைய இடைப் பெண்களோடு குரவை பிணைத்த குழகும்,Kuravai pinaittha kuzhagum - ராஸக்ரீடை பண்ணி ஒரு நீராக வந்திருந்ததும் அது இது உது என்னல் ஆவன அல்ல,Athu idhu udhu ennal aavan alla - ஒருபடியும் விசேஷித்துச் சொல்ல முடியாதவை. வையம்,Vaiyam - உலகங்கெல்லாம் முன் முதலில்,Mun mudhalil - மூலகாரணபூதனே! என்னை நைவிக்கும்,Ennai naivikum - என்னைச் சிதிலனாக்குகின்றன உன்னை என்று தலைப்பெய்வன்,Unnai endru thalaippeyvan - உன்னை என்னைக்குக் கிட்டுவேன்? |