திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3217 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3217திருவாய்மொழி || (5-10–பிறந்தவாறும் வளர்ந்தவாறும்) (ஆழ்வார் தாம் சேர்ந்து அனுபவிக்கும் நிலையைச் செய் என எம்பெருமானை வேண்டுதல்.) (ஸ்ரீ பன்னீராயிரப்படி –அபிமத விஷயத்தில் உன்னுடைய வியாபாரங்கள் என்னை சிதிலனாக்கா நின்றது என்கிறார்.) 2
வதுவை வார்த்தையுள் ஏறு பாய்ந்ததும் மாய மாவினை வாய் பிளந்தும் மதுவை வார் குழலார் குரவை பிணைந்த குழகும் அது இது உது என்னலாவன அல்ல என்னை உன் செய்கை நைவிக்கும் முதுவைய முதல்வா! உனை என்று தலைப் பெய்வனே?–5-10-2
பதவுரை Show / Hide
வதுவை வார்த்தையுள்,Vadhu vai vaarthaiyul - விவாஹப்ரஸ்தாவத்திலே
ஏறு பாய்ந்தனும்,Eru paaindhanum - விருஷங்களை மேல்விழுந்து கொன்றதும்
மாயம் மாவினை,Maayam maavinai - கபடமாகக் ருதிரையுருக் கொண்டு வந்த அசுரனை
வாய் பிளந்தும்,Vaai pilandhum - வாய்க்கீண்டு ஒழித்ததும்
மதுவை வாதர் குழலார்,Madhuvai vaathar kuzhalaar - மதுவைப் பெருக்குகின்ற கூந்தலையுடைய இடைப் பெண்களோடு
குரவை பிணைத்த குழகும்,Kuravai pinaittha kuzhagum - ராஸக்ரீடை பண்ணி ஒரு நீராக வந்திருந்ததும்
அது இது உது என்னல் ஆவன அல்ல,Athu idhu udhu ennal aavan alla - ஒருபடியும் விசேஷித்துச் சொல்ல முடியாதவை.
வையம்,Vaiyam - உலகங்கெல்லாம்
முன் முதலில்,Mun mudhalil - மூலகாரணபூதனே!
என்னை நைவிக்கும்,Ennai naivikum - என்னைச் சிதிலனாக்குகின்றன
உன்னை என்று தலைப்பெய்வன்,Unnai endru thalaippeyvan - உன்னை என்னைக்குக் கிட்டுவேன்?