| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3219 | திருவாய்மொழி || (5-10–பிறந்தவாறும் வளர்ந்தவாறும்) (ஆழ்வார் தாம் சேர்ந்து அனுபவிக்கும் நிலையைச் செய் என எம்பெருமானை வேண்டுதல்.) (பௌத்தாவாதார கதையைப் பேசி இப்படியும் ஒரு கள்ளவேடம் கொள்வதுண்டோ வென்று உருகுகிறார்.) 4 | கள்ள வேடத்தைக் கொண்டு போய்ப் புரம் புக்க வாறும் கலந்த சுரரை உள்ளம் பேதம் செய்திட்டு உயிருண்ட உபாயங்களும் வெள்ள நீர்ச் சடையானும் நின்னிடை வேறலாமை விளங்க நின்றதும் உள்ளமுள் குடைந்து என் உயிரை உருக்கி உண்ணுமே.–5-10-4 | கள்ளம் வேடத்தை கொண்டுபோய்,Kallam vaadathai kondupoi - வேதபாஹ்ய புத்தரூபவேஷத்தைப் பரிந்ரஹித்து புரம் புக்க ஆறும்,Puram pukka aarum - திரிபுரத்திலே ப்ரவேசித்தபடியும் அசுரரை கலந்து,Asurarai kalandhu - அசுரரோடே செறிந்து உள்ளம் பேதம் செய்திட்டு,Ullam paedham seydittu - மன வேறுபாட்டையுண்டாக்கி உயிர் உண்ட உபாயங்களும்,Uyir unda upaayangalum - அவர்களுடைய உயிரைக் கவர்ந்த விரகுகளும் வெள்ளம் நீர் சடையானும் நின்னிடை வேறு அலாமை விளங்க நின்றதும்,Vellam neer sadaiyaanum ninnidai veru alamai vilanga nindradhum - கங்கா ப்ரவாஹத்தைத்ச் சடையிலே தாங்கியுள்ள சிவனும் உன்பக்கல் வேறுபாடின்றி ஒற்றுமை பெற்று விளங்க நின்றதும் (ஆகிய இவை) உள்ளும் உள் குடைந்து,Ullum ul kudainthu - என்னெஞ்சுக்குள்ளே அவகாஹித்து என் உயிரை உருக்கி உண்ணும்,En uyirai urukki unnum - என் ஆத்மாவை நீராகவுருக்கியுண்கின்றன. |