| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3220 | திருவாய்மொழி || (5-10–பிறந்தவாறும் வளர்ந்தவாறும்) (ஆழ்வார் தாம் சேர்ந்து அனுபவிக்கும் நிலையைச் செய் என எம்பெருமானை வேண்டுதல்.) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –ஆஸ்ரித விஷயமாக செய்த சேஷ்டிதங்களும் அநுஸந்திக்கும் தோறும் என் மனஸ் ஸூ அற வழியா நின்றது என்கிறார்.) 5 | உண்ண வானவர் கோனுக்கு ஆயர் ஒருப்படுத்த அடிசில் உண்டதும் வண்ண மால் வரையை எடுத்து மழை காத்ததும் மண்ணை முன் படைத் துண்டுமிழ்ந்து கடந்திடந்து மணந்த மாயங்கள் எண்ணுந் தோறு மென்னெஞ்சு எரி வாய் மெழுகொக்கும் நின்றே.–5-10-5 | வானவர் கோனுக்கு உண்ண,Vaanavar koonukku unna - தேவேந்திரனுடைய ஆராதனைக்காக ஆயர் ஒருப்படுத்த,Aayar oruppadutha - இடையர்கள் ஸந்நாஹஞ் செய்த அடிசில் உண்டதும்,Adisil undadhum - ப்ரஸாதங்களையெல்லாம் தானே அமுதுசெய்தலும் வண்ணம் மால்வரையை எடுத்து மழை காத்தலும்,Vannam maalvaraiye eduthu mazhai kaathalum - அழகிய பெருமலையைக் குடையாக வெடுத்து மழையைத் தடுத்தும் மண்ணை முன் படைத்து,Mannai mun padaittu - பூமியை ஆதிகாலத்திலே ஸ்ருஷ்டித்து உண்டு உமிழ்ந்து கடந்து இடத்து மணந்த மாயங்கள்,Undu umizhndhu kadandhu idathu mantha maayangal - (ஸமய விசேஷங்களிலே) உண்டது உமிழ்ந்தது அளந்தது கிடந்தது மணந்தது ஆக இப்படியான மாயங்களுமாகிறவிவற்றை எண்ணுந்தோறும்,Ennunthorum - சிந்திக்கிறபோதெல்லாம் என் நெஞ்சு,En nenju - எம் மனமானது நின்று,Nindru - எப்போதும் எரி வாய் மெழுது ஓங்கும்,Eri vaai meluthu oongum - நெருப்பருகிலுள்ள மெழுகையொத்திரா நின்றது |