| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3221 | திருவாய்மொழி || (5-10–பிறந்தவாறும் வளர்ந்தவாறும்) (ஆழ்வார் தாம் சேர்ந்து அனுபவிக்கும் நிலையைச் செய் என எம்பெருமானை வேண்டுதல்.) (நின்றது மிருந்ததும் கிடந்ததும் இன்ன இன்ன விடங்களிலே யென்று வகுத்துக் கூறாமையாலே ஆசாரியர்கள் பலபடியும் ஈடுபட்டு நிர்வஹிப்பார்கள்.) 6 | நின்றவாறு மிருந்தவாறும் கிடந்தவாறும் நினைப்பரியன ஒன்றலா உருவாய் அருவாய நின் மாயங்கள் நின்று நின்று நினைகின்றேன் உனை எங்ஙனம் நினைகிற்பன்? பாவியேற்கு ஒன்று நன்குரையாய் உலகமுண்ட ஒண் சுடரே!–5-10-6 | நின்ற ஆறும் இருந்த ஆறும் கிடந்த ஆறும்,Nindra aarum irundha aarum kidandha aarum - ஆங்காங்கு நிற்கிறபடிகளும் வீற்றிருக்கிற படிகளும் சயனித்திருக்கிறபடிகளும் நினைப்பு அரியன,Ninaippu ariyan - நெஞ்சாலும் நினைக்க முடியாதவையாயிருக்கின்றன ஒன்று அவர் உரு ஆய்,Ondru avar uru aay - (இங்ஙனே) பலபடியாய் அரு ஆய்,Aru aay - எனக்கு அநுபவிக்கைக்கு உருத்தெரியாத நின் மாயங்கள்,Nin maayangal - உனது அற்புதச் செயல்களை நின்று நின்று நினைக்கின்றேன்,Nindru nindru ninaikkindrein - சிறிது சிறிதாக நினைக்கப் பார்க்கின்றேன் உலகம் உண்ட ஒண் சுடரே,Ulagam unda on sudare - உலகங்களை அமுதுசெய்த ஒளியுவனே! உன்னை எங்ஙனம் நினை நிற்பனந்,Unnai enganam ninaipanand - உன்னை எப்படி நினைக்கலாவேன்! பாவியேற்கு ஒன்று உரையாய்,Paaviyera ondru uraiyaay - தரித்து நின்று நினைக்க முடியாத பாவத்தைப் பண்ணினவெனக்கு ஒரு நல்விரகு அருளிச் செய்ய வேணும். |