திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3221 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3221திருவாய்மொழி || (5-10–பிறந்தவாறும் வளர்ந்தவாறும்) (ஆழ்வார் தாம் சேர்ந்து அனுபவிக்கும் நிலையைச் செய் என எம்பெருமானை வேண்டுதல்.) (நின்றது மிருந்ததும் கிடந்ததும் இன்ன இன்ன விடங்களிலே யென்று வகுத்துக் கூறாமையாலே ஆசாரியர்கள் பலபடியும் ஈடுபட்டு நிர்வஹிப்பார்கள்.) 6
நின்றவாறு மிருந்தவாறும் கிடந்தவாறும் நினைப்பரியன ஒன்றலா உருவாய் அருவாய நின் மாயங்கள் நின்று நின்று நினைகின்றேன் உனை எங்ஙனம் நினைகிற்பன்? பாவியேற்கு ஒன்று நன்குரையாய் உலகமுண்ட ஒண் சுடரே!–5-10-6
பதவுரை Show / Hide
நின்ற ஆறும் இருந்த ஆறும் கிடந்த ஆறும்,Nindra aarum irundha aarum kidandha aarum - ஆங்காங்கு நிற்கிறபடிகளும் வீற்றிருக்கிற படிகளும் சயனித்திருக்கிறபடிகளும்
நினைப்பு அரியன,Ninaippu ariyan - நெஞ்சாலும் நினைக்க முடியாதவையாயிருக்கின்றன
ஒன்று அவர் உரு ஆய்,Ondru avar uru aay - (இங்ஙனே) பலபடியாய்
அரு ஆய்,Aru aay - எனக்கு அநுபவிக்கைக்கு உருத்தெரியாத
நின் மாயங்கள்,Nin maayangal - உனது அற்புதச் செயல்களை
நின்று நின்று நினைக்கின்றேன்,Nindru nindru ninaikkindrein - சிறிது சிறிதாக நினைக்கப் பார்க்கின்றேன்
உலகம் உண்ட ஒண் சுடரே,Ulagam unda on sudare - உலகங்களை அமுதுசெய்த ஒளியுவனே!
உன்னை எங்ஙனம் நினை நிற்பனந்,Unnai enganam ninaipanand - உன்னை எப்படி நினைக்கலாவேன்!
பாவியேற்கு ஒன்று உரையாய்,Paaviyera ondru uraiyaay - தரித்து நின்று நினைக்க முடியாத பாவத்தைப் பண்ணினவெனக்கு ஒரு நல்விரகு அருளிச் செய்ய வேணும்.