Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3222 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3222திருவாய்மொழி || (5-10–பிறந்தவாறும் வளர்ந்தவாறும்) (ஆழ்வார் தாம் சேர்ந்து அனுபவிக்கும் நிலையைச் செய் என எம்பெருமானை வேண்டுதல்.) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –கண்ணாலே காணப் பெறாதே -ஆந்தர அனுசந்தானமேயாய் சிதிலனாய் போகாதே கண்ணாலே கண்டு தரித்து அனுபவிக்க வல்லேனாம் படி பண்ணி அருள வேணும் என்கிறார்.) 7
ஒண் சுடரோ டிருளுமாய் நின்றவாறும் உண்மை யோடின்மையாய் வந்து என்
கண் கொளா வகை நீ கரந்து எனைச் செய்கின்றன
எண் கொள் சிந்தையுள் நைகின்றேன் என் கரிய மாணிக்கமே! என் கண் கட்குத்
திண் கொள ஒருநாள் அருளாய் உன் திருவுருவே.–5-10-7
உண்மையோடு இன்மை ஆய் வந்து,Unmaiyodu inmai ay vanthu - மெய்யனாய்த் தோற்றுகை பொய்யனாய்த் தோற்றுகை ஆகிற இரண்டுபடியோடுங்கூடி
ஒண் சுடரோடு இருளும் ஆய் நின்ற ஆறும்,On sudarodu irulum ay ninra arum - ஒண்சுடராயும் இருளாயம் நிற்கிறபடிகளும்
என் கண்கொளாவகை,En kangolavakai - என் கண் உன்னையநுபலியாதபடி
கரந்து,Karandu - உள்ளேமறைந்து நின்று
நீ என்னை செய்கின்றன,Ni ennai seykinran - நீ என்னைப் படுத்துகிறபாடுகளும் ஆகிறவிவற்றை
எண் கொள் சிந்தையும்,En kol cintaiyum - என்ன வேணாமென்கிற அபி நிவேசங்கொண்ட சிந்தையோடே
நைகின்றேன்,Naikindren - சிதிலனாநாநின்றேன்
என் கரிய மாணிக்கமே,En kariya manikkame - என்னை யீடுபடுத்தின நீலமணியருவனே!
உன் திரு உரு,Un thiru uru - உனது திவ்யரூபத்தை
என் கண்கட்கு திண்கொள்ள,En kangatkku thin kollo - என் கண்களாலே திண்ணமாகக் காணும்படி
ஒருநாள் அருளாய்,Oru nal arulay - ஒருநாளாகிலு“ கிருபை செய்தருளவேணும்