| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3223 | திருவாய்மொழி || (5-10–பிறந்தவாறும் வளர்ந்தவாறும்) (ஆழ்வார் தாம் சேர்ந்து அனுபவிக்கும் நிலையைச் செய் என எம்பெருமானை வேண்டுதல்.) (ஸ்ரீ பன்னீராயிரப்படி –அநந்தரம் -உன்னுடைய சர்வாதிகத்வ ஸூசகமான ஸ்ருஷ்ட்யாதி வியாபாரங்களைக் கேட்க்கும் தோறெல்லாம் என் நெஞ்சு நெகிழ்ந்து கண்ணீர் சோரா நின்றது -நான் என் செய்வேன் -என்கிறார்.) 8 | திருவுருவு கிடந்தவாறும் கொப்பூழ்ச் செந்தாமரை மேல் திசைமுகன் கருவுள் வீற்றிருந்து படைத்திட்ட கருமங்களும் பொருவிலுன் தனி நாயக மவை கேட்குந்தோறும் என் நெஞ்சம் நின்று நெக்கு அருவி சோருங் கண்ணீர் என் செய்கேன் அடியேனே.–5-10-8 | திரு உருவு கிடந்த ஆறும்,Thiru uruvu kidantha arum - அழகிய திருமேனிகள் வளர்த்தருளின படியும் கொப்பூழ்செம் தாமரை மேல்,Koppuzh sem thamarai mel - திருநாபிக் கமலத்திலே திசைமுகன் கரு உன்,Disaimugan karu un - நான்மகனாகிற கருவுக்குள்ளே வீற்றிருந்து,Veerirundhu - அந்தராத்மாவாக எழுந்தருளியிருந்து படைத்திட்ட கருமங்களும்,Padaittidu karumangalum - ஸ்ருஷ்டித்த வியாபாரங்களுமாகிற பொரு இல்,Poru il - எதிரில்லாத உன் தனி நாயகம் அவை,Un thani nayagam avai - உன்னுடைய பரத்வ ப்ரகாசமான அவற்றை கேட்கும்தோறும்,Kekkum thorum - (வேதாந்திகன் சொல்லல்) கேட்கிறபோதெல்லாம் என் நெஞ்சம்,En nenjam - என் நெஞ்சானது நின்று நெக்கு,Nindru nekku - கட்டுக்குலைந்து நெகிழ்ந்து நின்று கண் நீர் அருவி சோரும்,Kan neer aruvi sorum - கண்ணீர் அருவியாகப் பெருகாகின்றது; அடியேன் என் செய்கேன்,Adiyen en seyken - தரித்திருக்க மாட்டாத அடியேன் என்ன பண்ணுவேன்? |