| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3225 | திருவாய்மொழி || (5-10–பிறந்தவாறும் வளர்ந்தவாறும்) (ஆழ்வார் தாம் சேர்ந்து அனுபவிக்கும் நிலையைச் செய் என எம்பெருமானை வேண்டுதல்.) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –உன்னுடைய சமுத்திர மதன வைசித்யர்த்தை அனுசந்தித்து சிதிலன் ஆகா நின்றேன் -தரித்து நின்று உன்னை அனுபவிக்கும் விரகு சொல்ல வேணும் என்று பிரார்த்திக்கிறார்.) 10 | கூடி நீரைக் கடைந்தவாறும் அமுதம் தேவர் உண்ண அசுரரை வீடும் வண்ணங்களே செய்து போன வித்தகமும் ஊடு புக்கென தாவியை உருக்கி உண்டிடுகின்ற நின் தனை நாடும் வண்ணம் சொல்லாய் நச்சு நாகணையானே!–5-10-10 | நஞ்சு நாகம் அணையானே,Nanju Naagam Anaiyaane - சேஷசயனனே கூடி நீரை கடைந்த ஆறும்,Koodi Neerai Kadaintha Aarum - தேவாசுரர்களோடு கூடித் திருப்பாற் கடலைக் கடைந்தபவும் அமுதம் தேவர் உண்ண,Amudham Devar Unn - அம்ருதத்தைத் தேவர்கள் பூஜிக்க அசுரரை வீடும் வண்ணங்களே செய்து போன வித்தகமும்,Asurarai Veedum Vannangale Seydhu Pona Vitthagamum - அசுரர்கள் அந்த அம்ருதத்தை விடும்படியாக ஸ்த்ரீ வேஷபரிச்சலும் பண்ணிப்போன விஸ்மயரீயாகாரமும் ஊடுபுக்கு,Oodupukku - உள்ளே புகுந்து எனது ஆவியை,Enadhu Aaviyai - என் ஆத்மாவை உருக்கி உண்டிடுகின்ற,Uruggi Undidugindru - நிர்பண்டமாக உருக்கிக் கபஸித்திக்கின்ற நின் தன்னை,Nin Thannai - உன்னை நாடும் வண்ணம் சொல்லாய்,Naadum Vannam Sollaay - நித்யாவாசம் பண்ணும் வழியை அருளிச் செய்யவேணும் |