திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3225 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3225திருவாய்மொழி || (5-10–பிறந்தவாறும் வளர்ந்தவாறும்) (ஆழ்வார் தாம் சேர்ந்து அனுபவிக்கும் நிலையைச் செய் என எம்பெருமானை வேண்டுதல்.) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –உன்னுடைய சமுத்திர மதன வைசித்யர்த்தை அனுசந்தித்து சிதிலன் ஆகா நின்றேன் -தரித்து நின்று உன்னை அனுபவிக்கும் விரகு சொல்ல வேணும் என்று பிரார்த்திக்கிறார்.) 10
கூடி நீரைக் கடைந்தவாறும் அமுதம் தேவர் உண்ண அசுரரை வீடும் வண்ணங்களே செய்து போன வித்தகமும் ஊடு புக்கென தாவியை உருக்கி உண்டிடுகின்ற நின் தனை நாடும் வண்ணம் சொல்லாய் நச்சு நாகணையானே!–5-10-10
பதவுரை Show / Hide
நஞ்சு நாகம் அணையானே,Nanju Naagam Anaiyaane - சேஷசயனனே
கூடி நீரை கடைந்த ஆறும்,Koodi Neerai Kadaintha Aarum - தேவாசுரர்களோடு கூடித் திருப்பாற் கடலைக் கடைந்தபவும்
அமுதம் தேவர் உண்ண,Amudham Devar Unn - அம்ருதத்தைத் தேவர்கள் பூஜிக்க
அசுரரை வீடும் வண்ணங்களே செய்து போன வித்தகமும்,Asurarai Veedum Vannangale Seydhu Pona Vitthagamum - அசுரர்கள் அந்த அம்ருதத்தை விடும்படியாக ஸ்த்ரீ வேஷபரிச்சலும் பண்ணிப்போன விஸ்மயரீயாகாரமும்
ஊடுபுக்கு,Oodupukku - உள்ளே புகுந்து
எனது ஆவியை,Enadhu Aaviyai - என் ஆத்மாவை
உருக்கி உண்டிடுகின்ற,Uruggi Undidugindru - நிர்பண்டமாக உருக்கிக் கபஸித்திக்கின்ற
நின் தன்னை,Nin Thannai - உன்னை
நாடும் வண்ணம் சொல்லாய்,Naadum Vannam Sollaay - நித்யாவாசம் பண்ணும் வழியை அருளிச் செய்யவேணும்