Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3226 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3226திருவாய்மொழி || (5-10–பிறந்தவாறும் வளர்ந்தவாறும்) (ஆழ்வார் தாம் சேர்ந்து அனுபவிக்கும் நிலையைச் செய் என எம்பெருமானை வேண்டுதல்.) (இத்திருவாய்மொழி கற்கைக்குப் பலனாகப் பரமபதத்தில் ப்ரஹ்மாநந்த ப்ராப்தியை அருளிச் செய்கிறார்.) 11
நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் நமக்கு என்று நாடொறும்
ஏக சிந்தையனாய்க் குருகூர்ச் சடகோபன் மாறன்
ஆக நூற்ற அந்தாதி ஆயிரத்துள் இவையுமொர் பத்தும் வல்லார்
மாக வைகுந்தத்து மகிழ் வெய்துவர் வைகலுமே.–5-10-11
நாகணை மிசை நம் பிரான் சரணே நமக்கு சரண் என்று,Naaganaai Misai Nam Piran Sarane Namakku Saran Endru - சேஷசாயியான எம்பெருமானுடைய திருவடிகளே நமக்குத் தஞ்சமென்று
நாள் தொறும் ஏக சிந்தையன் ஆண்,Naal Thorum Eka Sinthaiyan Aan - ஸ்திரமான ஆத்யவஸாயத்தை யுடையராய்க் கொண்டு
குருகூர் சடகோபன் மாறன்,Kurugoor Sadagopan Maaran - ஆழ்வார்
ஆக,Aaga - தாம்ஸத்தைபெறுவதற்கு
நூற்ற,Noortra - அருளிச் செய்த
அந்தாதி,Andaadhi - அந்தாதித் தொடையான
ஆயிரத்துள்,Aayiraththul - ஆயிரத்தினுள்ளே
இவையும் ஓர் பத்தும் வல்லார், Ivaiyum Or Paththum Vallar - இத் திருவாய்மொழியை ஓத வல்லவர்கள்
மாகம் வைகுந்தத்து,Maagam Vaikundaththu - பரமாகாசமான ஸ்ரீவைகுண்டத்திலே
வைகலும்,Vaigalum - ஆத்மாவுள்ளதனையும்
மகிழ்வு எய்துவர்,Magizhvu Eydhuvar - ஆனந்திகளாயிருப்பார்கள்.