| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3226 | திருவாய்மொழி || (5-10–பிறந்தவாறும் வளர்ந்தவாறும்) (ஆழ்வார் தாம் சேர்ந்து அனுபவிக்கும் நிலையைச் செய் என எம்பெருமானை வேண்டுதல்.) (இத்திருவாய்மொழி கற்கைக்குப் பலனாகப் பரமபதத்தில் ப்ரஹ்மாநந்த ப்ராப்தியை அருளிச் செய்கிறார்.) 11 | நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் நமக்கு என்று நாடொறும் ஏக சிந்தையனாய்க் குருகூர்ச் சடகோபன் மாறன் ஆக நூற்ற அந்தாதி ஆயிரத்துள் இவையுமொர் பத்தும் வல்லார் மாக வைகுந்தத்து மகிழ் வெய்துவர் வைகலுமே.–5-10-11 | நாகணை மிசை நம் பிரான் சரணே நமக்கு சரண் என்று,Naaganaai Misai Nam Piran Sarane Namakku Saran Endru - சேஷசாயியான எம்பெருமானுடைய திருவடிகளே நமக்குத் தஞ்சமென்று நாள் தொறும் ஏக சிந்தையன் ஆண்,Naal Thorum Eka Sinthaiyan Aan - ஸ்திரமான ஆத்யவஸாயத்தை யுடையராய்க் கொண்டு குருகூர் சடகோபன் மாறன்,Kurugoor Sadagopan Maaran - ஆழ்வார் ஆக,Aaga - தாம்ஸத்தைபெறுவதற்கு நூற்ற,Noortra - அருளிச் செய்த அந்தாதி,Andaadhi - அந்தாதித் தொடையான ஆயிரத்துள்,Aayiraththul - ஆயிரத்தினுள்ளே இவையும் ஓர் பத்தும் வல்லார், Ivaiyum Or Paththum Vallar - இத் திருவாய்மொழியை ஓத வல்லவர்கள் மாகம் வைகுந்தத்து,Maagam Vaikundaththu - பரமாகாசமான ஸ்ரீவைகுண்டத்திலே வைகலும்,Vaigalum - ஆத்மாவுள்ளதனையும் மகிழ்வு எய்துவர்,Magizhvu Eydhuvar - ஆனந்திகளாயிருப்பார்கள். |