| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3227 | திருவாய்மொழி || (6-1- வைகல் பூங்கழி) (திருவண்வண்டூர்ப் பெருமானிடம் தலைவி பறவைகளைத் தூதுவிடல்) (திருவண்வண்டூரிலே சென்று எம்பெருமானுக்கு என் அபிநிவேசத்தைத் தெரிவியுங்கோளென்று சில குருகுகளை நோக்கி இரக்கின்றாள்) 1 | வைகல் பூங்கழிவாய் வந்து மேயும் குருகினங்காள்! செய் கொள் செந்நெல் உயர் திரு வண்வண்டூ ருறையும் கை கொள் சக்கரத் தென் கனி வாய்ப் பெருமானைக் கண்டு கைகள் கூப்பிச் சொல்லீர் வினையாட்டியேன் காதன்மையே.–6-1-1 | வைகல்,Vaigal - எப்போதும் பூ கழி வாய்,Poo Kazhi Vaai - அழகிய நீர்நிலத்திலே வந்து மேயும்,Vandhu Meyum - வந்திருந்து இரையுண்கிற குருகு இனங்காள்,Kurugu Inangkaal - கொக்கின் கூட்டங்களே! செய் கொள் செந்நெல் உயர்,Sey Kol Sennel Uyar - கழனி நிரம்பிய செந்நெற்பயிர்கள் ஓங்கி வளர்ந்திருக்கப்பெற்ற திரு வண் வண்டூர் உறையும்,Thiru Van Vandur Uraiyum - திருவண் வண்டூரிலே நித்யவாஸம் பண்ணா நிற்பவனும் கை கொள் சக்கரத்து,Kai Kol Chakkarathu - திருக்கையிலே திருவாழியாழ்வானைக் கொண்டவனும் கனி வாய்,Kani Vaai - கனிபோன்ற திருவந்ரத்தையுடையவனுமான என் பெருமானை,En Perumaanai - எம்பெருமானை கண்டு,Kandu - நேரில் பார்த்து கைகள் கூப்பி,Kaigal Koopi - அஞ்ஜலி செய்து வினையாட்டியேன் காதன்மை சொல்லீர்,Vinaiyaattiyen Kaadhanmmai Sollir - இங்ஙனே பிரிந்திருக்கும் பாவமுடையளான என்னுடைய ஆவலைச் சொல்லுங்கோள் |