திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3230 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3230திருவாய்மொழி || (6-1- வைகல் பூங்கழி) (திருவண்வண்டூர்ப் பெருமானிடம் தலைவி பறவைகளைத் தூதுவிடல்) (ஒரு நொடிப் பொழுதும் பிரியாமே இடைவீடின்றிக் கலந்து வாழ்கின்ற அன்னப் பறவைகளை நோக்கி, திருவண்வண்டூரிலே நிரந்தரமாக நடைடிபறும் வேதவொலியைத் திருச்செவி சாத்திக்கொண்டு அ ங்கே கால் தாழ்ந்து வர்த்திக்கிற கடல்வண்ணனான பெருமானைக் கொண்டு என் பேரைச் சொல்லாதே ஒருத்தி உடல் நைந்து உருகுகின்றாளென்று சொல்லுங்கோளென்கிறாள்.) 4
இடரில் போகம் மூழ்கி இணைந்தாடும் மட அன்னங்காள்? விடலில் வேத ஒலி முழங்கும் தண் திரு வண் வண்டூர் கடலின் மேனிப் பிரான் கண்ணனை நெடுமாலைக் கண்டு உடலம் நைந்து ஒருத்தி உருகும் என்று உணர்த்துமினே.–6-1-4
பதவுரை Show / Hide
இடல் இல்,Idal Il - பிரிந்துபடும் துக்கமில்லாத
போகம் மூழ்கி,Pogam Moozhgi - இன்பத்தில் அவகாஹித்து
இணைந்து ஆடும்,Inaindhu Aadum - கலந்து வாழ்கின்ற
மடம் அன்னங்காள்,Madam Annangkaal - மடமைதங்கிய அன்னங்களே!
விடல் இல்,Vidal Il - இடைவீடில்லாத
வேதம் ஒலி முழங்கும்,Vedham Oli Muzhangum - வேதகோஷம் நிரம்பிய
தண் திருவண்வண்டூர்,Than Thiruvanvandur - வேதகோஷம் நிரம்பிய குளிர்ந்த திருவண்வண்டூரிலே
கடல் மேனி,Kadal Maeni - கடல்போன்ற திருமேனியையுடையவனும்
பிரான்,Piran - மஹோபகாரகனும்
கண்ணனை,Kannanai - ஆச்ரித ஸுலபனுமான
நெடு மாலை கண்டு,Nedu Maalai Kandu - ஸர்வேச்வரனைக் கண்டு
ஒருத்தி,Oruththi - ஒரு பெண்பிள்ளை
உடலம் நைந்து,Udalam Nainthu - சரீரம் தளர்ந்து
உருகும் என்று,Urugum Endru - உருகாநின்றாள் என்று
உணர்த்துமின்,Unarththumin - அறிவியுங்கள்!