| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3231 | திருவாய்மொழி || (6-1- வைகல் பூங்கழி) (திருவண்வண்டூர்ப் பெருமானிடம் தலைவி பறவைகளைத் தூதுவிடல்) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –சில அன்னங்களை குறித்து அவ்விடம் புக்காரை எல்லாம் மறப்பிக்கும் விஷயமாய் இருக்கும் -நீங்கள் அங்கு புக்கால் என்னையும் நினையுங்கோள் என்கிறாள் .) 5 | உணர்த்தல் ஊடல் உணர்ந்து உடன் மேயும் மடவன்னங்காள்! திணர்த்த வண்டல்கள் மேல் சங்கு சேரும் திருவண் வண்டூர் புணர்த்த பூந்தண் துழாய் முடி நம் பெருமானைக் கண்டு புணர்த்த கையினராய் அடியேனுக்கும் போற்றுமினே.–6-1-5 | ஊடல் உணர்த்தல் உணர்ந்து,Oodal Unarththal Unarnthu - (பிரிவு சிறிது உண்டா) ஊடலும் உணர்த்தலுமாகிற சிரமங்கள் நேருமென்ற்றிந்து உடன் மேயும்,Udan Meyum - கணப்பொழுதும் விட்டுப்பிரியாமல் கூடவே திரிகின்ற மடம் அன்னங்காள்,Madam Annangkaal - துவண்ட அன்னங்களே! திணர்த்த வண்டல்கள் மேல்,Thinartha Vandhalgal Mel - கொழுத்த வண்டல் மணல்களின் மேலே சங்கு சேரும்,Sangu Serum - சங்குகள் சேருமிடமான திரு வண்வண்டூர்,Thiru Vanvandur - திருவண்வண்டூரிலே புணர்த்த பூ தண் துழாய் முடி,Punartha Poo Than Thuzhai Mudi - தொடுக்கப்பட்ட அழகிய செவ்வித்துழா யணிந்த திருவபிஷேகத்தையுடையனான நம் பெருமானை கண்டு,Nam Perumaanai Kandu - நமது ஸ்வாமியைக் கண்டு புணர்த்த கையினர் ஆய்,Punartha Kaiyinar Aai - கை கூப்பினவர்களாய்க் கொண்டு அடியேனுக்கும்,Adiyenukkum - அடியேனுக்காகவும் போற்றுமின்,Potrumin - அத்தலைக்கு மங்களாசாஸனம் பண்ணுங்கோள் |