| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3232 | திருவாய்மொழி || (6-1- வைகல் பூங்கழி) (திருவண்வண்டூர்ப் பெருமானிடம் தலைவி பறவைகளைத் தூதுவிடல்) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –சில குயில்களைக் குறித்து திரு வண் வண்டூரில் சென்று எம்பெருமானைக் கண்டு உள்ள தசையை அறிவித்து அத்தலையில் நின்றும் ஒரு மாற்றம் கொண்டு வந்து என் மையல் தீருவதொரு வண்ணம் அருளிச் செய்ய வேணும் என்கிறாள் .) 6 | போற்றி யான் இரந்தேன் புன்னை மேலுறை பூங் குயில்காள்! சேற்றில் வாளை துள்ளும் திரு வண் வண்டூ ருறையும் ஆற்றல் ஆழி யங்கை அமரர் பெருமானைக் கண்டு மாற்றம் கொண்டருளீர் மையல் தீர்வதொரு வண்ணமே.–6-1-6 | புன்னை மேல் உறை,Punnai Mel Urai - புன்னை மரங்களின மேலே வாழ்கிற பூ குயில்காள்,Poo Kuyilkaal - அழகிய குயில்களே! யான்,Yaan - அடியேன் போற்றி இரந்தேன்,Potri Iranthen - துதித்து வேண்டுகின்றேன், வாளை,Vaalai - வாளை மீன்களானவை சேற்றில் துள்ளும் திரு வண்வண்டூர் உறையும்,Thiru Vanvandur Uraiyum - சேற்று நிலங்களிலே களித்து உகளப்பெற்ற திருவண்வண்டூரிலே வாழ்பவனும் ஆற்றல் ஆழி அம் கை,Aatral Aazhi Am Kai - சக்திமிகுந்த திருவாழியை அழகிய கையிலே உடையவனுமான அமரர் பெருமானை கண்டு,Amarar Perumaanai Kandu - தேவாதிதேவனைக் கண்டு மையல் தீர்வது ஒரு வண்ணம்,Maiyal Theervathu Oru Vannam - என்னுடைய வியாமோஹம் தீரும்படியான மாற்றம் கொண்டு அருளீர்,Maatram Kondu Aruleer - ஒரு நல்வார்த்தை கொண்டுவந்து உதவவேணும். |