Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3234 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3234திருவாய்மொழி || (6-1- வைகல் பூங்கழி) (திருவண்வண்டூர்ப் பெருமானிடம் தலைவி பறவைகளைத் தூதுவிடல்) (திருவண்வண்டூரிலே சென்று அங்குறையும் எம்பெருமானுடைய திவ்ய அவயவ ஸௌந்தர்யத்தை நன்றாகக் கண்டு மீண்டு வந்து எனக்கொன்று சொல்ல வேணு மென்று பூவைப் பறவையைக் குறித்துச் சொல்லுகிறாள்.) 8
திருந்தக் கண்டு எனக்கு ஒன்றுரையாய்; ஒண் சிறு பூவாய்!
செருத்தி ஞாழல் மகிழ் புன்னை சூழ் தண் திரு வண் வண்டூர்
பெருந் தண் தாமரைக் கண் பெரு நீண் முடி நாற்றடந்தோள்
கருந் திண் மா முகில் போல் திருமேனி அடிகளையே.–6-1-8
ஒண் சிறு பூவாய்,On Siru Poovai - அழகிய சிறிய வடிவையுடைய பூவையே!
செருந்தி நாழல் மகிழ் புன்னை சூழ்,Serundhi Naazhal Magizh Punnai Soozh - சுரபுன்னை, ஞாழல் மகிழமரம், புன்னை மரம் ஆகிய இவற்றால் சூழப்பட்ட
தண் திருவண்வண்டூர்,Than Thiru Vanvandur - குளிர்ந்த திருவண்வண்டூரிலே (எழுந்தருளியிருக்கின்ற)
பெரு தண் தாமரை கண்,Peru Than Thamarai Kan - பெரிய தண்டாமரை போன்ற திருக்கண்களையுடையவரும்
பெரு நீள் முடி,Peru Neel Mudi - மிகப்பெரிய திருவபிஷேகத்தையுடையவரும்
நால் தட தோள்,Naal Thada Thol - நான்கு தடத்தோள்களை யுடையவரும்
கரு திண் மா முகில் போல் திரு மேனி,Karu Thin Maa Mugil Pol Thiru Maeni - கறுத்துத் திண்ணிய மஹாமேகம் போன்ற திருமேனியை யுடையவருமான
அடிகளை,Adigalai - ஸ்வாமியை
திருந்த கண்டு,Thirundha Kandu - நன்றாக ஸேவித்து
எனக்கு ஒன்று உரையாய்,Enakku Ondru Uraiyaai - எனக்கொரு வார்த்தை சொல்லவேணும்