| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3234 | திருவாய்மொழி || (6-1- வைகல் பூங்கழி) (திருவண்வண்டூர்ப் பெருமானிடம் தலைவி பறவைகளைத் தூதுவிடல்) (திருவண்வண்டூரிலே சென்று அங்குறையும் எம்பெருமானுடைய திவ்ய அவயவ ஸௌந்தர்யத்தை நன்றாகக் கண்டு மீண்டு வந்து எனக்கொன்று சொல்ல வேணு மென்று பூவைப் பறவையைக் குறித்துச் சொல்லுகிறாள்.) 8 | திருந்தக் கண்டு எனக்கு ஒன்றுரையாய்; ஒண் சிறு பூவாய்! செருத்தி ஞாழல் மகிழ் புன்னை சூழ் தண் திரு வண் வண்டூர் பெருந் தண் தாமரைக் கண் பெரு நீண் முடி நாற்றடந்தோள் கருந் திண் மா முகில் போல் திருமேனி அடிகளையே.–6-1-8 | ஒண் சிறு பூவாய்,On Siru Poovai - அழகிய சிறிய வடிவையுடைய பூவையே! செருந்தி நாழல் மகிழ் புன்னை சூழ்,Serundhi Naazhal Magizh Punnai Soozh - சுரபுன்னை, ஞாழல் மகிழமரம், புன்னை மரம் ஆகிய இவற்றால் சூழப்பட்ட தண் திருவண்வண்டூர்,Than Thiru Vanvandur - குளிர்ந்த திருவண்வண்டூரிலே (எழுந்தருளியிருக்கின்ற) பெரு தண் தாமரை கண்,Peru Than Thamarai Kan - பெரிய தண்டாமரை போன்ற திருக்கண்களையுடையவரும் பெரு நீள் முடி,Peru Neel Mudi - மிகப்பெரிய திருவபிஷேகத்தையுடையவரும் நால் தட தோள்,Naal Thada Thol - நான்கு தடத்தோள்களை யுடையவரும் கரு திண் மா முகில் போல் திரு மேனி,Karu Thin Maa Mugil Pol Thiru Maeni - கறுத்துத் திண்ணிய மஹாமேகம் போன்ற திருமேனியை யுடையவருமான அடிகளை,Adigalai - ஸ்வாமியை திருந்த கண்டு,Thirundha Kandu - நன்றாக ஸேவித்து எனக்கு ஒன்று உரையாய்,Enakku Ondru Uraiyaai - எனக்கொரு வார்த்தை சொல்லவேணும் |