| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3235 | திருவாய்மொழி || (6-1- வைகல் பூங்கழி) (திருவண்வண்டூர்ப் பெருமானிடம் தலைவி பறவைகளைத் தூதுவிடல்) (சில அன்னப்பறவைகளை நோக்கி ‘திருவண்வண்டூரெம் பெருமானிடத்துச்சென்று ஏகாந்தமாக என் விஷயம் விஜ்ஞாபிக்கவேணும்‘ என்று இரக்கிறாள். ‘திருவடிகளைச் சிக்கனப் பிடித்துக் கொண்டு‘ என்று சொல்ல வேண்டிய ஸ்தானத்திலே அடிகள் கை தொழுது என்கிறாள்.) 9 | அடிகள் கை தொழுது, அலர் மேல் அசையும் அன்னங்காள்! விடிவை சங்கொலிக்கும் திருவண் வண்டூ ருறையும் கடிய மாயன் தனைக் கண்ணனை நெடுமாலைக் கண்டு கொடிய வல்வினையேன் திறம் கூறுமின்; வேறு கொண்டே.–6-1-9 | அலர் மேல் அசையும் அன்னங்காள்,Alar Mel Asaiyum Annangkaal - பூவின் மேலேயிருந்து உலாவுகின்ற அன்னங்களே! விடிவை,Vidivai - ஸுப்ரபாதகாலத்திலே சங்கு ஒலிக்கும்,Sangu Olikkum - சங்கு முழங்கப்பெற்ற திரு வண்வண்டூர்,Thiru Vanvandur - திருவண்வண்டூரிலே உறையும்,Uraiyum - எப்போதும் வாழ்கின்ற கடிய மாயன் தன்னை,Kadiya Maayan Thannai - கடுமையான மாயச் செயல்களையுடையனாய் அடியார்களுக்கு விதேயனாய் நெடு மாலை,Nedu Maalai - அடியார்பக்கலிலே மிகவும் வியாமோஹ முடையவனாயிருக்கிற எம்பெருமானை கண்டு,Kandu - சேவித்து அடிகள் கை தொழுது,Adigal Kai Thozhudhu - திருவடிவாரத்திலே அஞ்ஜலிபண்ணி கொடிய வல் வினையேன் திறம்,Kodiya Val Vinaiyen Thiram - மிகக்கொடிய பாபத்தையுடையேனான என் விஷயமாக வேறு கொண்டு,Veru Kondu - ஏகாந்தமாக கூறுமின்,Koorumin - புருஷகாரமான வார்த்தைகளைச் சொல்லுங்கள் |