| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3236 | திருவாய்மொழி || (6-1- வைகல் பூங்கழி) (திருவண்வண்டூர்ப் பெருமானிடம் தலைவி பறவைகளைத் தூதுவிடல்) (சில வண்டுகளைக் குறித்துக் கூறுகின்றாள். “எமது தலைவர் பெண் பிறந்தார் காரியமெல்லாம் செய்து தலைக் கட்டி விட்டோமென்றிரப்பர், அப்படி யன்றிக்கே, ரக்ஷ்ய வர்க்கத்திலே நானு மொருத்தி யிருக்கின்றதாகச் சொல்லுங்கோள்“ என்கிறாள்.) 10 | வேறு கொண்டு உம்மை யான் இரந்தேன்; வெறி வண்டினங்காள்! தேறு நீர்ப் பம்பை வடபாலைத் திருவண் வண்டூர் மாறில் போர் அரக்கன் மதிள் நீறு எழச் செற்றுகந்த ஏறு சேவகனார்க்கு என்னையும் உளள் என்மின்களே.–6-1-10 | வெறி வண்டு இனங்காள்,Veri Vandu Inangkaal - பரிமளம் மிக்க வண்டினங்களே! உம்மை வேறு கொண்டு,Ummai Veru Kondu - உங்களிடத்திலே விலக்ஷணப்ரதிபத்தி பண்ணி யான் இரந்தேன்,Yaan Iranthen - அடியேன் ஒன்று தேறு நீர் பம்பை வடபால் திருவண்வண்டூர்,Theru Neer Pambai Vadapaal Thiru Vanvandur - தெளிந்தநீரையுடைய பம்பையாற்றின் வடபக்கத்திலுள்ள தான திருவண்வண்டுரிலே (எழுந்தருளியிருக்கின்ற) மாறு இல் போர் அரக்கன்,Maaru Il Por Arakkan - நிகரற்ற யுத்தம் செய்வதில்வல்லவனான இராவணனுடைய மதிள்,Mathil - மதிள்முதலிய யாவும் நீறு எழ,Neeru Ezha - பொடிபொடியாம்படி செற்று,Settru - இலங்கையையழித்து (அதனால்) உகந்த,Ugandha - திருவுள்ளமுவந்த எறு சேவகனார்க்கு,Eru Sevakanaarkku - மஹாவீரனான ஸ்ரீராமபிரானிடத்திலே என்னையும் உள்ள் என்மின்கள்,Ennaiyum Ull Enminkal - ரக்ஷ்யவர்த்திலே நானுமொருத்தி இருப்பதாகச் சொல்லுங்கோள். |