Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3237 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3237திருவாய்மொழி || (6-1- வைகல் பூங்கழி) (திருவண்வண்டூர்ப் பெருமானிடம் தலைவி பறவைகளைத் தூதுவிடல்) (இத்திருவாய்மொழி கற்பார் எம்பெருமானுக்கும் அவனடியார்கட்கும். விரும்பத் தக்கவராவர் என்று பயனுரைத்துத் தலைக் கட்டுகிறது.) 11
மின் கொள் சேர் புரி நூல் குறளாய் அகல் ஞாலம் கொண்ட
வன் கள்வ னடி மேல் குருகூர்ச் சடகோபன் சொன்ன
பண் கொள் ஆயிரத்துள் இவை பத்தும் திரு வண் வண்டூர்க்கு
இன் கொள் பாடல் வல்லார் மதனர்; மின்னிடை யவர்க்கே.–6-1-11
மின் கொள் சேர் புரிநூல் குறள் ஆய்,Min Kol Ser Purinool Kural Aai - ஒளியையுடைத்தாய், திருமேனிக்குச் சேர்ந்த்தான் யஜ்ஞோபவீதமணிந்த வாமனமூர்த்தியாகி
அகல் ஞாலம் கொண்ட,Agal Gnalam Konda - விசாலமான பூமி முழுவதையும் அளந்து கொண்ட
வன் கள்வன்,Van Kalvan - மஹாவஞ்சகனான எம்பெருமானுடைய
அடிமேல்,Adimel - திருவடிகள் விஷயமாக
குருகூர் சடகோபன் சொன்ன,Kurukoor Sadagopan Sonna - நம்மாழ்வார் அருளிச் செய்த
பண் கொள் ஆயிரத்துள்,Pan Kol Aayirathul - பண்மிகுந்த ஆயிரத்தினுள்ளே
திருவண்வண்டூர்க்கு,Thiru Vanvandurukku - திருவண்வண்டூர் விஷயமான
இன் கொள் பாடல்,In Kol Paadal - பரமபோக்யமான பாடலான
இவை பத்தும்,Ivai Pathum - இப்பத்துப்பாசுரங்களையும்
வல்லார்,Vallar - ஓதவல்லவர்கள்
மின் இடையவர்க்கு மதனர்,Min Idaiyavarkku Madhanar - காமினிகளுக்குக் காமுகர்போல் எம்பெருமானுக்கு ஸ்ப்ருஹணீயராவர்கள்