| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3241 | திருவாய்மொழி || (6-2–மின்னிடை மடவார்கள்) (தலைவன் காலம் தாழ்த்து வரக்கண்ட தலைவி ஊடல்கொண்டு உரைத்தல்) (ஸ்ரீ இருபத்து நாலாயிரப்படி -அரை க்ஷணம் தாழ்த்தோம் என்னா-அசங்கத பாஷணங்களை சொல்லுகிறது என் -நான் பரதந்த்ரன் அல்லனோ -மாதா பிதாக்கள் போய் பசுக்களை மேய் என்று நியமித்தால் உங்கள் பக்கல் வரப்போமோ -இது ஒழிய வேறு ஒரு விளம்ப ஹேது இல்லை என்ன -அக்கடிதங்களை கடிப்பிக்கை நீ வல்லது ஓன்று அன்றோ -என்கிறாள்.) 4 | ஆலி னீளிலை ஏழுலகு முண்டு அன்று நீ கிடந்தாய்; உன் மாயங்கள் மேலை வானவரும் அறியார்; இனி எம் பரமே? வேலினேர் தடங்கண்ணினார் விளையாடு சூழலைச் சூழவே நின்று காலி மேய்க்க வல்லாய்! எம்மை நீ கழறேலே.–6-2-4 | ஏழ் உலகும் உண்டு,Ezh Ulagum Undu - ஸமஸ்த லோகங்களையும் பிரளயங்கொள்ளாதபடி திருவயிற்றிலே வைத்து ஆலின் நீள் இலை,Aalin Neel ilai - ஆலமரத்தின் இளந்தளிரிலே அன்று நீ கிடந்தாய்,Andru Nee Kidandhaay - முன்னொருகாலத்தில் கிடந்தவனல்லையோ நீ உன் மாயங்கள்,Un Maayangal - உனது மாயச்செயல்களை மேலே வானவரும் அறியார்,Mele Vaanavarum Ariyaar - மேற்பட்டவர்களான நித்யஸூரிகளும் அறியார்கள், இனி எம் பரமே,Ini Em Parame - அப்படியிருக்க எம்மால் அறியப்போமோ, வேலின் நேர் தட கண்ணினார்,Velin Ner thada Kanninaar - வேல்போன்று பெரிய கண்களை யுடையவர்களான மாதர்கள் விளையாடு,Vilaiyaadu - விளையாடுமிடமான சூழலை,Soozhalai - விலாஸ ஸ்தானங்களை சூழவே நின்று,Soozhave Nindru - பற்றிக்கொண்டிருந்து காலி மேய்க்க வல்லாய்,Kaali Meikka Vallai - பசுக்களைமேய்க்கவல்ல பெருமானே! எம்மை நீ சுழறேல்,Emmay Nee Suzharel - இந்தப் பொய்கள் எங்களுக்குச் சொல்லவேண்டா. |