Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3244 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3244திருவாய்மொழி || (6-2–மின்னிடை மடவார்கள்) (தலைவன் காலம் தாழ்த்து வரக்கண்ட தலைவி ஊடல்கொண்டு உரைத்தல்) (ஸ்ரீ பன்னீராயிரப்படி –அநந்தரம் ப்ரயோஜன நிரபேஷமாக சர்வ லோகத்தையும் ரஷிக்கும் பெருமையை யுடைய உனக்கு எங்களை ஸ்பர்சித்துகே கையில் பாவையைப் பறிக்கிற இது கார்யம் அன்று என்கிறாள்.) 7
கன்மமன்று எங்கள் கையில் பாவை பறிப்பது கடல் ஞாலம் உண்டிட்ட
நின்மலா! நெடியாய்! உனக்கேலும் பிழை பிழையே;
வன்மமே சொல்லி எம்மை நீ விளையாடுதி; அது கேட்கில் என்னைமார்
தன்மம் பாவம் என்னார்; ஒரு நான்று தடி பிணக்கே.–6-2-7
கடல் ஞாலம் உண்டிட்ட,Kadal Gnalam Undittu - கடல் சூழ்ந்த வுலகங்களையெல்லாம் ஒருகால் திருவயிற்றினுட்கொண்ட
நின்மலா,Ninmala - விமலனே!
நெடியாய்,Nediyaai - பெரியோனே!
எங்கள் கையில் பாவை பறிப்பது,Engal Kaiyil Paavai Parippadhu - எங்கள் கையிலுள்ள லீ லோபகரணங்களை லியப்பிடித்திழுப்பதானது
கன்மம் அன்று,Kanmam Andru - செய்யத்தகுந்த காரியமன்று
உனக்கேலும் பிழை பிழையே,Unakkellum Pizhai Pizhaiye - இது உனக்கு மிகப்பெரிய அவத்யமேயாகும் (இதுவன்றியும்)
எம்மை,Emmay - எங்களை நோக்கி
வன்ம்மே சொல்லி,Vanmme Solli - மருமமான வார்த்தைகளைச் சொல்லி
விளையாடுதி,Vilaiyaaduthi - விளையாடுகின்றாய்
என் ஐம்மார்,En Aimmaar - எங்களுடைய ஸஹோதரர்கள்
அது கேட்டில்,Adhu Keettil - இப்படியெல்லாம் நீ செய்தும் சொல்லியும் போருகிறயென்பதைக் கேட்கப்பெற்றார்களாகில்
தன்மம் பாவம் என்னார்,Tanmam Paavam Ennar - நன்மை தீமை யென்று கூடப் பாரார்கள்
ஒரு நான்று தடி பிணக்கே,Oru Naandru Tadi Pinakke - ஒரு கால் உன்னைத் தடியிட்டுத் தகர்க்கும்படியாகவும் நேர்ந்துவிடும்.