Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3248 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3248திருவாய்மொழி || (6-2–மின்னிடை மடவார்கள்) (தலைவன் காலம் தாழ்த்து வரக்கண்ட தலைவி ஊடல்கொண்டு உரைத்தல்) (ஸ்ரீ ஆறாயிரப்படி - அதில் ஸ்நேஹினியான யசோதைபி பிராட்டி வெண்ணெய் களவு கண்டாய் என்று பொடித்த போது போலே ஆழ்வார் தாம் ப்ராணாய கோபத்தாலே எம்பெருமானோடு கலப்பேன் அல்லேன் என்று அகல அது பொறுக்க மாட்டாமே தளர்ந்த தளர்த்தியை அநு சந்தித்து இனியராய் அவ்வெம்பெருமானை எத்தின இத்திருவாய் மொழியை இப்பான வ்ருத்தி இன்றிக்கே சொன்னார்க்கும் எம்பெருமான் ஸந்நிஹிதனாய் இருக்கச் செய்தே -பிறங்கி-செறிந்து -தாம் பட்ட துக்கம் பட வேண்டா என்கிறார் .) 11
ஆய்ச்சியாகிய அன்னையால் அன்று வெண்ணெய் வார்த்தையுள் சீற்றமுண்டழு
கூத்த அப்பன் தன்னைக் குருகூர்ச் சடகோபன்
ஏந்திய தமிழ் மாலை ஆயிரத்துள் இவையும் ஒர்பத்து இசையொடும்
நாத்தன்னால் நவில உரைப்பார்க்கு இல்லை நல் குரவே.–6-2-11
அன்று,Andru - பண்டொருகாலத்தில்
வெண்ணெய் வார்த்தையுள்,Vennai varthaiyul - வெண்ணெய்களவு ஸம்பந்தமான ப்ரஸ்தாவம் வந்தவளவிலே
ஆய்ச்சி ஆகிய அன்னையால்,Aaychchi aagiya annaiyal - இடைக்குலத்துகித்த யசோதை யாகிய தாயாலே
அழு கூத்தன்,Azhukuuthan - அழுகையாகிற கூத்தைச் செய்தவனான
அப்பன் தன்னை,Appan thannai - ஸ்வாமியைக் குறித்து
குரு கூர் சடகோபன்,Kurukoor sadagopan - ஆழ்வார்
ஏத்திய,Eththiya - ஸ்தோத்ர்ரூபமாகச் செய்த
தமிழ் மாலை ஆயரத்துள்,Tamil maalai aayaraththul - தமிழ்த் தொடையான ஆயிரம் பாசுரங்களில்
இவையும் ஓர் பத்து,Ivaiyum or paththu - இப்பத்துப் பாசுரங்களை
இசையொடும்,Isaiyodum - இசையோடு கூட
நா தன்னால் நவில உரைப்பார்க்கு,Naa thannal naviLa uraipparkku - நாவினாலே செறியச்சொல்லுமவர்களுக்கு
நல்குரவு இல்லை,Nalguravu illai - பகவதநுபவம் கிடையாமையாகிற தாரித்ரியம் இல்லையாம்.