| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3250 | திருவாய்மொழி || (6-3–நல்குரவும் செல்வும்) (தம்மை வசீகரித்தவன் ஸர்வேஸ்வரன் என்று அருளிச் செய்தல் (திருவிண்ணகர்)) (ஐங்கருவிகண்டவின்பம் * என்கிறபடியே செவி வாய் கண் மூக்கு உடலென்கிற ஐந்து உறுப்புகளாலும் அநுபவிக்கப்படுகிற இன்பமும் அதற்கு எதிர்த்தட்டான துன்பமும் தானேயாயிருக்கை! வைஷயிக ஸுகாபாஸங்களையே சிலர் இன்பமாக நினைக்கும்படியும் அவற்றையே சிலர் துன்பமாக நினைக்கும்படியும் செய்யுமவ னென்கை.) 2 | கண்ட இன்பம் துன்பம் கலக்கங்களும் தேற்றமுமாய்த் தண்டமும் தண்மையும் தழலும் நிழலுமாய்க் கண்டு கோடற்கரிய பெருமான் என்னை ஆள்வானூர் தெண் திரைப் புனல் சூழ் திருவிண்ணகர் நன்னகரே.–6-3-2 | கண்ட இன்பம் துன்பம்,Kanda inbam tunbam - உலகங்கண்ட ஸுகதுக்கங்களாயும் கலக்கங்களும் தேற்றமும் ஆய்,Kalakkangalum theRramum aai - கலக்கமும் தெளிவுமாய் தண்டமும் தண்மையும்,Thandamum thaNmaiyum - நிக்ரஹமும் அநுக்ரஹமுமாய் தழலும் நிழலும் ஆய்,Thazhalum nizhalum aai - வெப்பமும் தட்பமுமாய் கண்கொள்தற்கு அரிய பெருமான்,Kankoldharku ariya perumaan - ஒருவரால் பரிச்சேதித்து அறியமுடியாத விபூதி விஸ்தாரத்தை யுடையனாய் என்னை ஆள்வான்,Ennai aalvaan - என்னை அடிமைகொள்பவனான ஸர்வேச்வரனுடைய ஊர்,Oor - திவ்யதேசம் எதுவென்றால், தெண் திரை புனல் சூழ்,Then tirai punal soozh - தெளிந்து அலையெறிகின்ற தீர்த்தம் சூழ்ந்த திருவிண்ணகர்,Tiruvinnagar - திருவிண்ணகரென்கிற நல் நகர்,Nal nagar - அழகிய நகரமாகும். |