Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3250 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3250திருவாய்மொழி || (6-3–நல்குரவும் செல்வும்) (தம்மை வசீகரித்தவன் ஸர்வேஸ்வரன் என்று அருளிச் செய்தல் (திருவிண்ணகர்)) (ஐங்கருவிகண்டவின்பம் * என்கிறபடியே செவி வாய் கண் மூக்கு உடலென்கிற ஐந்து உறுப்புகளாலும் அநுபவிக்கப்படுகிற இன்பமும் அதற்கு எதிர்த்தட்டான துன்பமும் தானேயாயிருக்கை! வைஷயிக ஸுகாபாஸங்களையே சிலர் இன்பமாக நினைக்கும்படியும் அவற்றையே சிலர் துன்பமாக நினைக்கும்படியும் செய்யுமவ னென்கை.) 2
கண்ட இன்பம் துன்பம் கலக்கங்களும் தேற்றமுமாய்த்
தண்டமும் தண்மையும் தழலும் நிழலுமாய்க்
கண்டு கோடற்கரிய பெருமான் என்னை ஆள்வானூர்
தெண் திரைப் புனல் சூழ் திருவிண்ணகர் நன்னகரே.–6-3-2
கண்ட இன்பம் துன்பம்,Kanda inbam tunbam - உலகங்கண்ட ஸுகதுக்கங்களாயும்
கலக்கங்களும் தேற்றமும் ஆய்,Kalakkangalum theRramum aai - கலக்கமும் தெளிவுமாய்
தண்டமும் தண்மையும்,Thandamum thaNmaiyum - நிக்ரஹமும் அநுக்ரஹமுமாய்
தழலும் நிழலும் ஆய்,Thazhalum nizhalum aai - வெப்பமும் தட்பமுமாய்
கண்கொள்தற்கு அரிய பெருமான்,Kankoldharku ariya perumaan - ஒருவரால் பரிச்சேதித்து அறியமுடியாத விபூதி விஸ்தாரத்தை யுடையனாய்
என்னை ஆள்வான்,Ennai aalvaan - என்னை அடிமைகொள்பவனான ஸர்வேச்வரனுடைய
ஊர்,Oor - திவ்யதேசம் எதுவென்றால்,
தெண் திரை புனல் சூழ்,Then tirai punal soozh - தெளிந்து அலையெறிகின்ற தீர்த்தம் சூழ்ந்த
திருவிண்ணகர்,Tiruvinnagar - திருவிண்ணகரென்கிற
நல் நகர்,Nal nagar - அழகிய நகரமாகும்.