| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3253 | திருவாய்மொழி || (6-3–நல்குரவும் செல்வும்) (தம்மை வசீகரித்தவன் ஸர்வேஸ்வரன் என்று அருளிச் செய்தல் (திருவிண்ணகர்)) (சிறியார் பெரியார் என்கிற வாசின்றிக்கே அனைவர்க்கும் காவலோன் திருவிண்ணகரப்ப னென்கிறார்) 5 | கைதவம் செம்மை கருமை வெளுமையுமாய் மெய் பொய் இளமை முதுமை புதுமை பழமையுமாய்ச் செய்த திண் மதிள் சூழ்திரு விண்ணகர்ச் சேர்ந்த பிரான் பெய்த காவு கண்டீர் பெருந் தேவுடை மூவுலகே.–6-3-5 | கைதவம் செம்மை,Kaithavam semmai - கோணலும் நேர்மையுமாய் கருமை வெளுமையும் ஆய்,Karumai veLmaiyum aai - கறுப்பும் வெளுப்புமாய் மெய் பொய்,Mey poi - மெய்யும் பொய்யுமாய் இளமை முதுமை,iLamai mudhumai - யௌவனமும் கிழத்தனமுமாய் புதுமை பழமையும் ஆய்,Puthumai pazhamaiyum aai - நவீநத்வமும் ஜீர்ணத்தவமுமாய்க்கொண்டு செய்த திண் மதின் சூழ்,Seydha thiN madhin soozh - வேலைப்பாடுகளுடன் செய்யப்பட்ட திடமான மதிளாலே சூழப்பட்ட திருவிண்ணகர்,TiruviNNagar - திருவிண்ணகரிலே சேர்ந்த பிரான்,Serndha piraan - வர்த்திக்கிற ஸர்வேச்வரன் பெய்த காவு கண்டீர்,Peydha kaavu kandeer - ஆக்கின சோலையன்றோ பெரும் தேவு உடை மூ உலகு,Perum dhevu udai mu ulagu - பிரமன் முதலான உத்க்ருஷ்ட தேவதைகளை யுடைத்தான மூவுலகமும். |