| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3254 | திருவாய்மொழி || (6-3–நல்குரவும் செல்வும்) (தம்மை வசீகரித்தவன் ஸர்வேஸ்வரன் என்று அருளிச் செய்தல் (திருவிண்ணகர்)) (படைக்கப்படுதல், கருமங்களுக்கு வசப்பட்டிருத்தல், ஸத்வ ரஜஸ் தமோ குணமயமாயிருத்தல் என்கிற இவற்றாலே அவிலக்ஷணமாயிருக்கும் மூன்று லோகங்கள், இத்தன்மைகளுக்கு எதிர்த்தட்டாய்ப் பரமவிலக்ஷணமாயிருக்கும் நித்யவிபூதி, இவையெல்லாம் இவனிட்ட வழக்கென்றது) 6 | மூவுலகங்களுமாய் அல்லனாய் உகப்பாய் முனிவாய் பூவில் வாழ் மகளாய்த் தவ்வையாய்ப் புகழாய்ப் பழியாய்த் தேவர் மேவித் தொழும் திரு விண்ணகர்ச் சேர்ந்த பிரான் பாவியேன் மனத்தே உறைகின்ற பரஞ் சுடரே.–6-3-6 | மூ உலகங்களும் ஆய்,Moo ulagangalum aai - (ஆக்குவதற்கும் அழப்பதற்கும் நிலமான) மூன்று லோகங்களாயும் அல்லன் ஆய்,Allan aai - (அங்ஙனல்லாத) நித்ய விபூதியாய் உகப்பு ஆய் முனிவு ஆய,Ugappu aai munivu aai - ராகத்வேஷங்களாயும் பூவில் வாழ் மகள் ஆய்,Poovil vaazhmahal aai - ஸ்ரீ மஹாலக்ஷ்மியாயும் தௌவை ஆய்,Thauvai aai - மூதேவி யென்கிற அலக்ஷ்மியாயும் புகழ் ஆய் பழி ஆய்,Pugazh aai pazhi aai - கீர்த்தியாயும் அபகீர்த்தியாயும் இருந்துகொண்டு தேவர் மேவி தொழும் திரு விண்ணகர் சேர்ந்த பிரான்,Thevar mevi thozhum tiru vinnagar serndha piraan - தேவர்கள் விரும்பித்தொழுமிடமான திருவிண்ணகரில் உறையும் பெருமான் பாவியேன் மனத்தே,Paaviyaan manathe - பாவியான என்னுடைய மனத்திலே உறைகின்ற,Uraiginra - நித்யவாஸம்பண்ணுகின்ற பரம் சுடர்,Param sudar - பரஞ்சோதியாவன். |