Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3254 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3254திருவாய்மொழி || (6-3–நல்குரவும் செல்வும்) (தம்மை வசீகரித்தவன் ஸர்வேஸ்வரன் என்று அருளிச் செய்தல் (திருவிண்ணகர்)) (படைக்கப்படுதல், கருமங்களுக்கு வசப்பட்டிருத்தல், ஸத்வ ரஜஸ் தமோ குணமயமாயிருத்தல் என்கிற இவற்றாலே அவிலக்ஷணமாயிருக்கும் மூன்று லோகங்கள், இத்தன்மைகளுக்கு எதிர்த்தட்டாய்ப் பரமவிலக்ஷணமாயிருக்கும் நித்யவிபூதி, இவையெல்லாம் இவனிட்ட வழக்கென்றது) 6
மூவுலகங்களுமாய் அல்லனாய் உகப்பாய் முனிவாய்
பூவில் வாழ் மகளாய்த் தவ்வையாய்ப் புகழாய்ப் பழியாய்த்
தேவர் மேவித் தொழும் திரு விண்ணகர்ச் சேர்ந்த பிரான்
பாவியேன் மனத்தே உறைகின்ற பரஞ் சுடரே.–6-3-6
மூ உலகங்களும் ஆய்,Moo ulagangalum aai - (ஆக்குவதற்கும் அழப்பதற்கும் நிலமான) மூன்று லோகங்களாயும்
அல்லன் ஆய்,Allan aai - (அங்ஙனல்லாத) நித்ய விபூதியாய்
உகப்பு ஆய் முனிவு ஆய,Ugappu aai munivu aai - ராகத்வேஷங்களாயும்
பூவில் வாழ் மகள் ஆய்,Poovil vaazhmahal aai - ஸ்ரீ மஹாலக்ஷ்மியாயும்
தௌவை ஆய்,Thauvai aai - மூதேவி யென்கிற அலக்ஷ்மியாயும்
புகழ் ஆய் பழி ஆய்,Pugazh aai pazhi aai - கீர்த்தியாயும் அபகீர்த்தியாயும் இருந்துகொண்டு
தேவர் மேவி தொழும் திரு விண்ணகர் சேர்ந்த பிரான்,Thevar mevi thozhum tiru vinnagar serndha piraan - தேவர்கள் விரும்பித்தொழுமிடமான திருவிண்ணகரில் உறையும் பெருமான்
பாவியேன் மனத்தே,Paaviyaan manathe - பாவியான என்னுடைய மனத்திலே
உறைகின்ற,Uraiginra - நித்யவாஸம்பண்ணுகின்ற
பரம் சுடர்,Param sudar - பரஞ்சோதியாவன்.