| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3256 | திருவாய்மொழி || (6-3–நல்குரவும் செல்வும்) (தம்மை வசீகரித்தவன் ஸர்வேஸ்வரன் என்று அருளிச் செய்தல் (திருவிண்ணகர்)) (ஸ்ரீ பன்னீராயிரப்படி –அநந்தரம் அநு கூல பிரதிகூல விஷயங்களான ஸ்வபாவங்களை யுடைய சர்வேஸ்வரனாய் – ஆஸ்ரித பவ்யனான ஸ்ரீ கிருஷ்ணன் எனக்கு அசாதாரணமான புகலிடம் என்கிறார்.) 8 | வன் சரண் சுரர்க்காய் அசுரர்க்கு வெங் கூற்றமுமாய்த் தன் சரண் நிழற் கீழ் உலகம் வைத்தும் வையாதும் தென் சரண் திசைக்குத் திரு விண்ணகர்ச் சேர்ந்த பிரான் என் சரண் என் கண்ணன் என்னை ஆளுடை என்னப்பனே.–6-3-8 | சுரர்க்கு வன் சரண் ஆய்,Surarkku van saran aai - தேவர்களுக்குச் சிறந்த புகலிடமாய் அசுரர்க்கு வெம்கூற்றமும் ஆய்,Asurarkku vemkooRRamum aai - அஸுரர்களுக்கு வலிய மிருத்யுவாய் உலகம் தன் சரண் நிழல் கீழ் வைத்தும்வையாதும்,Ulagam than saran nizhal keezh vaithumvaiyaadhum - உலகத்தைத் தன் திருவடிச் சரயையிலே ஒதுக்கியும் ஒதுக்காமலும் (இருந்துகொண்டு) தென் திசைக்கு சரண் திரு விண்ணகர் சேர்ந்த பிரான்,Then dhisaiyukku saran tiru vinnagar serndha piraan - தென்திசைக்குள்ளே புகலிடமான திருவண்ணகரிலே தங்கியுள்ள பெருமான் என்சரண்,En saran - எனக்கு சரண்யன் என் கண்ணன்,En kannan - எனக்கு விதேயன் என்னை ஆளுடை என் அப்பன்,Ennai aaludai en appan - என்னை அடிமைகொண்ட மஹோபகாரகன். |