Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3258 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3258திருவாய்மொழி || (6-3–நல்குரவும் செல்வும்) (தம்மை வசீகரித்தவன் ஸர்வேஸ்வரன் என்று அருளிச் செய்தல் (திருவிண்ணகர்)) (ஸ்ரீ பன்னீராயிரப்படி –அநந்தரம் -இப்படி பரஸ்பர விருத்த ஆகாரமான சகல சராசரங்களையும் விபூதியாகயுடைய சர்வேஸ்வரன் திருவடிகள் அல்லது வேறு ரக்ஷகமுடையோம் அல்லோம் -இத்தை நிரூபித்துக் கொள்ளுங்கோள் என்று உபதேசித்து முடிக்கிறார்.) 10
நிழல் வெய்யில் சிறுமை பெருமை குறுமை நெடுமையுமாய்ச்
சுழல்வன நிற்பன மற்றுமாய் அவை அல்லனுமாய்
மழலை வாய் வண்டு வாழ் திரு விண்ணகர் மன்னு பிரான்
கழல்கள் அன்றி மற்றோர் களை கண் இலம்; காண்மின்களே.–6-3-10
நிழல் வெய்யில்,Nizhal veyyil - நிழலாயும் வெய்யிலாயும்
சிறுமை பெருமை,Sirumai perumai - அணுத்வமாயும் விபுத்வமாயும்
குறுமை நெடுமையும் ஆய்,Kurumai netumaiyum aai - ஹ்ரஸ்வத்வமாயும் தீர்க்கத்வமாயும்
சுழல்வன நிற்பன மற்றும் ஆய,Suzhalvan nirpanum aai - ஜங்கமங்களாயும் ஸ்தாவரங்களாயும் மற்றுமுள்ள பதார்த்தங்களாயும்
அவை அல்லனும் ஆய்,Avai allanum aai - அவற்றினுடைய ஸ்வபாவத்தையுடையனல் லாதவனாயும் இருந்து கொண்டு
மழலை வாய் வண்டு வாழ் திரு வண்ணகர் மன்னுபிரான்,Mazhalai vaay vandu vaazh tiru vannagar mannupiran - மழலைப்பேச்சை யுடையவண்டுகள் களித்துவர்த்திக்கிற திருவிண்ணகரிலே நித்யவாஸம் பண்ணுகிற எம்பெருமானுடைய
கழல்கள் அன்றி,Kazhalkal andri - திருவடிகள்தவிர
மற்று ஓர் களைகண் இலம்,Matru or kalaign ilam - வேறொரு ரக்ஷகவஸ்துவை யுடையோமல்லோம்
காண்மின்கள்,Kanminkal - இதை ஸத்யமென்று கொள்ளுங்கள்