Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3260 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3260திருவாய்மொழி || (6-4–குரவை யாய்ச்சியரோடு) (கண்ணனது அவதாரச் செயல்களைப் பேசப் பெற்றமைக்குக் களித்தல்) (ராஸக்ரீடை, கோவர்த்தநோத்தரணம், காளியமர்த்தனம் என்கிற மூன்று அபதானங்களை இதிற்பேசி இனியராகிறார்.) 1
குரவை ஆய்ச்சியரோடு கோத்ததும் குன்றம் ஒன்று ஏந்தியதும்
உரவுநீர்ப் பொய்கை நாகங் காய்ந்ததும் உள்பட மற்றும் பல
அரவில் பள்ளிப் பிரான் தன் மாய வினைகளையே அலற்றி
இரவும் நன்பகலும் தவிர்கிலன் என்ன குறைவு எனக்கே.–6-4-1
ஆய்ச்சியரோடு,Aichchiyarodu - கோபிமார்களோடு
குரவை கோத்ததும்,Kuravai koththathum - ராஸக்ரீடை செய்த தென்ன
குன்றம் ஒன்று ஏந்தியதும்,Kunram ondru yenthiathum - கோவர்த்தன மென்கிற மலையொன்றைக் குடையாக வெடுத்ததென்ன,
உரவு நீர் பொய்கை,Uravu neer poigai - முதிர்ந்த ஜலத்தையுடைத்தான யமுனைப் பொய்கையில்
நாகம் காய்ந்ததும்,Naagam kaainthathum - காளியநாகத்தை முனிந்ததென்ன
உட்பட,Utpada - ஆகிய இவை முதலாக
மற்றும் பல,Matrum pala - மற்றும் பலவகைப்பட்டவையான
அரவில் பள்ளி பிரான் தன் மாயம் வினைகளையே அலற்றி,Aravil palli piraan than maayam vinaigalaie alatri - நாகபர்யங்கசயனனான கண்ணபிரானது அற்புதசேஷ்டி தங்களையே வாயாரப்பேசி
நல் இரவ்வும் பகலும் தவர்கிலம்,Nal iravvum pagalum thavargilam - வாய்ந்த இரவிலும் பகலிலும் ஓய்கின்றிலோம்.
நமக்கு என்ன குறை,Namakku enna kurai - இங்ஙனே இடைவீடின்றி அநுபவிக்கப்பெற்ற நமக்கு என்ன குறையுண்டு.