| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3260 | திருவாய்மொழி || (6-4–குரவை யாய்ச்சியரோடு) (கண்ணனது அவதாரச் செயல்களைப் பேசப் பெற்றமைக்குக் களித்தல்) (ராஸக்ரீடை, கோவர்த்தநோத்தரணம், காளியமர்த்தனம் என்கிற மூன்று அபதானங்களை இதிற்பேசி இனியராகிறார்.) 1 | குரவை ஆய்ச்சியரோடு கோத்ததும் குன்றம் ஒன்று ஏந்தியதும் உரவுநீர்ப் பொய்கை நாகங் காய்ந்ததும் உள்பட மற்றும் பல அரவில் பள்ளிப் பிரான் தன் மாய வினைகளையே அலற்றி இரவும் நன்பகலும் தவிர்கிலன் என்ன குறைவு எனக்கே.–6-4-1 | ஆய்ச்சியரோடு,Aichchiyarodu - கோபிமார்களோடு குரவை கோத்ததும்,Kuravai koththathum - ராஸக்ரீடை செய்த தென்ன குன்றம் ஒன்று ஏந்தியதும்,Kunram ondru yenthiathum - கோவர்த்தன மென்கிற மலையொன்றைக் குடையாக வெடுத்ததென்ன, உரவு நீர் பொய்கை,Uravu neer poigai - முதிர்ந்த ஜலத்தையுடைத்தான யமுனைப் பொய்கையில் நாகம் காய்ந்ததும்,Naagam kaainthathum - காளியநாகத்தை முனிந்ததென்ன உட்பட,Utpada - ஆகிய இவை முதலாக மற்றும் பல,Matrum pala - மற்றும் பலவகைப்பட்டவையான அரவில் பள்ளி பிரான் தன் மாயம் வினைகளையே அலற்றி,Aravil palli piraan than maayam vinaigalaie alatri - நாகபர்யங்கசயனனான கண்ணபிரானது அற்புதசேஷ்டி தங்களையே வாயாரப்பேசி நல் இரவ்வும் பகலும் தவர்கிலம்,Nal iravvum pagalum thavargilam - வாய்ந்த இரவிலும் பகலிலும் ஓய்கின்றிலோம். நமக்கு என்ன குறை,Namakku enna kurai - இங்ஙனே இடைவீடின்றி அநுபவிக்கப்பெற்ற நமக்கு என்ன குறையுண்டு. |