Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3261 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3261திருவாய்மொழி || (6-4–குரவை யாய்ச்சியரோடு) (கண்ணனது அவதாரச் செயல்களைப் பேசப் பெற்றமைக்குக் களித்தல்) (ஸ்ரீ பன்னீராயிரப்படி –அநந்தரம் ஆச்சர்யமான ஆகாரத்தை யுடையனான ஸ்ரீ கிருஷ்ணனுடைய நினைத்தார் நெஞ்சை நெகிழப் பண்ணும் சேஷ்டிதங்களை ச ஸ்நேஹ அநு சந்தானம் பண்ணிக் காலம் எல்லாம் போகா நின்றது – நித்ய அனுபவம் பண்ணுகிற விலக்ஷண தேசம் எனக்கு சத்ருசமோ -என்கிறார்) 2
கேயத் தீங்குழல் ஊதிற்றும் நிரை மேய்த்ததும் கெண்டை ஒண்கண்
வாசப் பூங்குழல் பின்னை தோள்கள் மணந்ததும் மற்றும் பல
மாயக் கோலப் பிரான்தன் செய்கை நினைந்து மனம் குழைந்து
நேயத்தோடு கழிந்த போது எனக்கு எவ் வுலகம் நிகரே.–6-4-2
கேயம் தீம் குழல் ஊதிற்றும்,Keyam theem kuzhal oothiththum - சிறந்த கானமாக மதுரமான ய்ங்குழலை ஊதினதென்ன.
நிரை மேய்த்ததும்,Nirai meiththathum - பசுக்கூட்டங்க மேய்த்ததென்ன
கெண்டை ஒண்கண் வாசம் பூ குழல் பின்னை தோள்கள் மணந்ததும்,Kendaionkan vaasam poo kuzhal pinnai tholkaL mananthathum - கென்னட மின்போன்று அழகிய கண்களையும் நறுமணம்மிக்க பூக்களணிந்த கூந்தலையுமுடைய நப்பின்னையின் தோள்களோடே அணையப்பெற்றதென்ன இவையும்
மற்றும் பல,Matrum pala - மற்றும் பலவுமான
மாயம் கோலம் பிரான்தன் செய்கை,Maayam kolam piraanthan seikai - திவ்யமங்கள விக்ரஹசாலியான கண்ணபிரானுடைய சேஷ்டிதங்களை
நினைத்து,Ninaiththu - சிந்த்னைசெய்து
மனம் குழைந்து,Manam kuzhaindhu - நெஞ்சு நீர்ப்பண்டமாக
கேயத்தோடு எனக்கு கழிந்த போது,Keyaththodu enakku kazhintha podhu - அன்போடு எனக்குக் கழிகின்ற காலத்தின்
எவ்வுலகம் நிகர்,Evvulagam nigar - உபயவிபூதியும் ஒவ்வாது.