| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3262 | திருவாய்மொழி || (6-4–குரவை யாய்ச்சியரோடு) (கண்ணனது அவதாரச் செயல்களைப் பேசப் பெற்றமைக்குக் களித்தல்) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –கிருஷ்ண சேஷ்டிதங்களை அனுபவித்துக் கொண்டு எனக்கு காலம் எல்லாம் போகப் பெற்றேன் -இன்னது பெற்றிலேன் என்று நோவ வேண்டுவது இல்லை என்கிறார் .) 3 | நிகரில் மல்லரைச் செற்றதும் நிரை மேய்த்ததும் நீள் நெடுங்கைச் சிகர மா களிறு அட்டதும் இவை போல்வனவும் பிறவும் புகர்கொள் சோதிப் பிரான் தன் செய்கை நினைந்து புலம்பி என்றும் நுகர வைகல் வைகப் பெற்றேன் எனக்கென் னினி நோவதுவே?–6-4-3 | நிகர் இல் மல்லரை செற்றதும்,Nigar il mallarai setrathum - (மிடுக்கில்) ஒப்பில்லாத மல்லர்களை முடிந்த்தென்ன நிரை மேய்த்ததம்,Nirai meiththathum - ப்சுக்களை மேய்த்ததென்ன நீள் நெடு கை,Neel nedu kai - உயர்ந்த நெடி துதிக்கையை யுடையதாய் சிகரம் மா,Sikaram maa - மலைசிகரம்போன்று (பெரிதான களிறு,Kaliru - (கஞ்சனது) யானையை அட்டதும்,Attathum - கொன்றொழித்ததென்ன (இவை போல்வனவும் பிறவும்) புகர் கொள் சோதி பிரான் தன் செய்கை,Pugar kol sothi piraan than seikai - மிகவும் ஜ்வலிக்கின்ற ஒளியுருவனான கண்ணபிரானுடைய செயல்களை நினைந்து புலம்பி,Ninainthu pulambi - நினைத்தும் வாய்விட்டுக் கதறியும் என்றும் நுகர,Endrum nugar - நித்தியமும் அநுபவிக்கும் படியாக வைகல் வைக பெற்றேன்,Vaigal vaigapetren - காலம் மிகவும் நீளும்படிபெற்றேன், இனி,Ini - இப்படியானபின்பு எனக்கு என் நோவது,Enakku en novathu - எனக்கு க்லேசப்படவேண்டுவதுண்டோ, |