| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3264 | திருவாய்மொழி || (6-4–குரவை யாய்ச்சியரோடு) (கண்ணனது அவதாரச் செயல்களைப் பேசப் பெற்றமைக்குக் களித்தல்) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –திருவவதாரம் பண்ணி அருளினை பின்பு -கம்சன் அறியாத படி வளர்ந்து கம்சனை மாய்த்த படி -இன்று இருந்து அனுபவிக்கப் பெற்ற எனக்கு ஒரு மிடி இல்லை என்கிறார் -எதிர் உண்டோ என்றுமாம்) 5 | வேண்டித் தேவர் இரக்க வந்து பிறந்ததும் வீங்கிருள்வாய்ப் பூண்டு அன்று அன்னை புலம்பப் போய் அங்கோர் ஆய்க் குலம் புக்கதும் காண்ட லின்றி வளர்ந்து கஞ்சனைத் துஞ்ச வஞ்சம் செய்ததும் ஈண்டு நான் அலற்றப் பெற்றேன் எனக்கு என்ன இகல் உளதே?–6-4-5 | தேவர் இரக்க,Devar irakka - தேவதைகள் பிரார்த்திக்க வேண்டி,Vendi - திருவுள்ளமுவந்து வந்து பிறந்ததும்,Vanthu pirandathum - நிலவுலகத்தில் வந்து அவதரித்ததென்ன அன்று,Andru - அப்போதே அன்னை,Annai - பெற்றதாயான தேவகி பூண்டு,Poondhu - (கஞ்சன்பக்கல் பயத்தினால்) எடுத்தணைத்துக் கொண்டு புலம்ப,Pulamba - இங்கேயிருந்தால் என்ன அபாயம் விளையுமோவென்று கதறி யழுதவளவிலே ஓர் ஆய் குலம் புக்கலும்,Or aai kulam pukalum - இடைச்சேரியிலே பிரவேசித்ததென்ன காண்டல் இன்றி வளர்ந்து,Kaandal indri valarnthu - விரோதிகளுக்குக் காணுதலில்லாதபடி மறைவாக வளர்ந்து கஞ்சனை துஞ்சவஞ்சம் செய்ததும்,Kanchanai thunja vanjam seidathum - கம்ஸன் முடியும்படியாக அவன் திறத்திலே வஞ்சனைசெய்த்தென்ன ஆகிய இச்செயல்களை ஈண்டு,Indu - இப்போது (அல்லது) இவ்விடத்தே நான் அலற்ற பெற்றேன்,Naan alatra petren - நான் வாய்விட்டு உத்கோஷிக்கப்பெற்றேன், எனக்கு என்ன இகல் உளது,Enakku enna ikal ulathu - இனி எனக்கு என்ன குறையுண்டு? |